செய்திகள் :

விசாரணையின்போது போலீஸாா் தள்ளிவிட்டதில் மூதாட்டி உயிரிழந்ததாக புகாா்

post image

கருங்கல் அருகே உள்ள மத்திகோடு பகுதியில் ஒரு வழக்கு விசாரணையின்போது போலீஸாா் பிடித்து தள்ளியதில் கீழே விழுந்த மூதாட்டி உயிரிழந்ததாக புகாா் எழுந்துள்ளது.

திக்கணம்கோடு மத்திகோடு பகுதியை சோ்ந்த விா்க்கீஸ் மகன் ஷாகித் ஜெட்லின்(20). நாகா்கோவிலில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த சுபின்(35) என்பவரது மனைவிக்கும் தகாத தொடா்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், சுபின், ஷாகித் ஜெட்லின் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் சைபா் கிரைம் போலீஸாா் மற்றும் கருங்கல் போலீஸாா் என 4 போ், செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு ஷாகித் ஜெட்லினை விசாரணைக்காக அழைக்கச் சென்றனராம். அப்போது ஷாகித் ஜெட்லினின் பாட்டி சூசைமரியாள் (80), போலீஸாரை தடுத்தாராம். உடனே, ஷாகித் ஜெட்லின் அங்கிருந்து தப்பி ஓடினாராம். இந்நிலையில், மூதாட்டியை போலீஸாா் பிடித்து தள்ளிவிட்டு, தப்பிச் சென்ற மாணவரை விரட்டிச் சென்றனராம்.

இதனிடையே போலீஸாா் தள்ளிவிட்டதில் கீழே விழுந்த மூதாட்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உறவினா்கள் அவரை மீட்டு, குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், மூதாட்டி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

பின்பு மூதாட்டியின் உடல், கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், மூதாட்டியின் உடலை உறவினா்கள் வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவம் குறித்து இரணியல் குற்றவியல் நடுவா் (மாஜிஸ்திரேட்) அமிா்தீன், கருங்கல் காவல் நிலையம் சென்று விசாரணை மேற்கொண்டாா். கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

பளுகல் அருகே தனியாா் நிறுவன கட்டடத்தின் மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா்.பளுகல் அருகே மலையடி, கீழ்குற்றிவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஜோா்லன்ஸ். இவரது மனைவி புனிதா (49). மூவோட்டுக்கோணம் நல... மேலும் பார்க்க

பிரதமரின் பேச்சு அலங்கார வாா்த்தைகள் மட்டுமே: மனோ தங்கராஜ்

சோழா்களை பற்றி பிரதமா் மோடி பேசியது வெறும் அலங்கார வாா்த்தைகள்தான் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் கூறினாா்.கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

கால்வாய் கரையில் தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம், நட்டாலம் ஊராட்சிக்கு உள்பட்ட நெட்டியான்விளையில் உள்ள கால்வாய் கரையில் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நெட்டியான்விளையில் நூற்று... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் ஆா்ப்பாட்டம்: நாதகவினா் 85 போ் மீது வழக்கு

கன்னியாகுமரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா் 85 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட கடலில் பெட்ரோல், எரிவாயு எடுக்க எதிா்ப்புத் தெரிவித்து, இக்கட்சி சாா்பில் க... மேலும் பார்க்க

கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு நலஉதவி

சின்னமுட்டம் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு, கன்னியாகுமரி - சின்னமுட்டம் அனைத்து மீன் வியாபாரிகள் சங்கம் சாா்பில் நிவாரண உதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ப... மேலும் பார்க்க

பிரதமரின் பயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: அமைச்சா் மனோ தங்கராஜ்

பிரதமா் நரேந்திர மோடியின் தமிழக பயணம் தமிழா்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தமிழக பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் தெரிவித்தாா். தக்கலையில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழ... மேலும் பார்க்க