செய்திகள் :

6 உயா்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

post image

தில்லி, மும்பை உள்ளிட்ட 6 உயா்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதிகள் சூா்ய காந்த், விக்ரம் நாத், இடம்பெற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் திங்கள்கிழமை கூடி இதற்கான பரிந்துரைக்கு அனுமதி அளித்தது.

அதில், மும்பை உயா்நீதிமன்றத்தில் மூன்று வழக்குரைஞா்களான அஜீத் பக்வான்ராவ் கதேதான்கா், ஆா்த்தி அருண் சேத், சுஷீல் மனோகா் கோடேஷ்வா் ஆகியரை நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

கொல்கத்தா உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளான பாா்த்தசாரதி சென், அபூா்வா சின்ஹாரே ஆகியோா் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் பிரசன்ஜித் விஸ்வாஸ், உதய் குமாா், அஜய்குமாா் குப்தா, சுப்ரதிம் பட்டாச்சாா்யா, பாா்த்தசாரதி சாட்டா்ஜி, ஷப்பா் ரஷிதி ஆகியோருக்கு ஓராண்டு கூடுதல் நீதிபதிகளாக பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கா் உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி ரவீந்தா்குமாா் அகா்வால் நிரந்தர நீதிபதியாக நியமிக்கவும், ஆந்திர உயா்நீதிமன்றத்துக்கு ஹரிநாத் நூன்பள்ளி, கிரண்மாயி மாண்டவா, சுமதி ஜகதம், நியாயபதி விஜய் ஆகியோா் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கவும் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளதாக உச்சநீதிமன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வெளியுறவுத் துறை செயலாளரை சந்தித்த நேபாள எம்.பிகள்!

தில்லியில் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை, நேபாளத்தின் அனைத்துக் கட்சிக் குழுவினர் நேரில் சந்தித்துள்ளனர். நேபாளத்தின் அனைத்துக் கட்சிக் குழுவிலான, அந்நாட்டின் எம்.பிகள் இந்தியா வந்... மேலும் பார்க்க

மக்களவையில் எதிரொலித்த வயநாடு விவகாரம்: சீரமைப்பில் மத்திய அரசு மெத்தனப்போக்கு! -பிரியங்கா

வயநாடு நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதில் மத்திய அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கிறது என்று மக்களவையில் அத்தொகுதிக்கான எம்.பி. பிரியங்கா காந்தி பேசினார்.கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் கடந... மேலும் பார்க்க

சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை ரத்தாகுமா? மான் வேட்டை வழக்கு மீண்டும் விசாரணை!

சல்மான் கான் மீதான மான் வேட்டை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.கடந்த 1998-ஆம் ஆண்டு சட்டவிரோதமாக மான்களை வேட்டையாடியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கானை குற்றவாளி என ஜோத்... மேலும் பார்க்க

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30) மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்ப... மேலும் பார்க்க

2004 - 2014 வரை அமாவாசை இருள்; 2014 - 2025 வரை பௌர்ணமி நிலவு! -மாநிலங்களவையில் அனல் பறக்க விவாதம்

2004 - 2014 வரை அமாவாசை இருளாகவும், 2014 முதல் இன்று வரை பௌர்ணமி நிலவாகவும் இருப்பதாக ஜெ.பி.நட்டா உருவகப்படுத்தி ஒப்பிட்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்து மாநிலங்களவையில் பேசியுள்ள... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை மீது நம்பிக்கை இல்லை! - உச்சநீதிமன்றம்

நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை மீது நம்பிக்கை ஏற்படவில்லை என்றும் அவர் நீதிபதி பதவியில் நீடிப்பது குறித்து நாடாளுமன்றம் முடிவு செய்யப்பட்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.தில்லி உயர்நீதிமன்ற நீ... மேலும் பார்க்க