செய்திகள் :

2004 - 2014 வரை அமாவாசை இருள்; 2014 - 2025 வரை பௌர்ணமி நிலவு! -மாநிலங்களவையில் அனல் பறக்க விவாதம்

post image

2004 - 2014 வரை அமாவாசை இருளாகவும், 2014 முதல் இன்று வரை பௌர்ணமி நிலவாகவும் இருப்பதாக ஜெ.பி.நட்டா உருவகப்படுத்தி ஒப்பிட்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்து மாநிலங்களவையில் பேசியுள்ளார்.

1947-க்கு பின் எந்தவொரு பிரதமரும் செய்யாததை பிரதமராக நரேந்திர மோடி செய்தார் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் பற்றிய சிறப்பு விவாதத்தின்போது ஜெ.பி.நட்டா பேசியதாவது, "அரசியல் தலைமை என்பது மிக முக்கியமானது. ராணுவத்துக்கு உரிய அறிவுறுத்தல்களை இந்த தலைமையே வழங்குகிறது.

பொறுப்பான, தன்மையான, முற்போக்கான அரசுக்கும் தேவைக்கு ஏற்றாற்போல் அந்த தருணத்தில் செயல்படும் அரசுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.

இன்னொரு விதமான அரசும் உள்ளது. செயல்திறன் இல்லாமல் எதற்கும் பெரிதாக எதிர்வினையாற்றாமல் பதிலளிக்காமல் செயல்படும் அரசு.

இதனை நாம் இரண்டு கட்டங்களாகப் பார்க்க வேண்டும்: 2004 முதல் 2014 வரை அதன்பின், 2014 முதல் 2025 வரை.

தில்லியில் அக்டோபர் 29, 2005-இல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் - 67 பேர் கொல்லப்பட்டனர், வாரணாசியில் மார்ச் 7, 2006-இல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் 28 பேர் கொல்லப்பட்டனர், மும்பையில் ஜூலை 11, 2006-இல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் 209 பேர் கொல்லப்பட்டனர். மேற்கண்ட குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பின், எந்தவொரு நடவடிக்கையும் கடந்த ஆட்சிகளில் பெரிதாக எடுக்கப்படவில்லை. இதன்மூலம் அந்த அரசின் பொறுப்பற்ற தன்மை பிரதிபலிக்கிறது.

அப்போதைய அரசு பாகிஸ்தானுடன் மென்மையான போக்கையே கடைப்பிடித்தது. அழுத்தம் தரவேயில்லை.

அமாவாசை இருளைப் பற்றி அறிந்துகொண்டால்தான் பௌர்ணமி நிலவின் முக்கியத்துவத்தை நீங்கள் பாராட்டுவீர்கள். அதற்காகத்தான் கடந்தகால நிகழ்வுகளையெல்லாம் இப்போது குறிப்பிட்டுச் சொல்கிறேன்.”

"1947-க்கு பின் எந்தவொரு பிரதமரும் பயங்கரவாத விவகாரங்களில் எதிர்வினையாற்றியதில்லை. ஆனால், நீங்கள்(எதிர்க்கட்சிகள்) ‘பிரதமர் பேச வேண்டும்’ என்று வலியுறுத்துகிறீர்கள். பிரதமர் நரேந்திர மோடி பேசினால் உலகம் அதை கேட்க தயாராக இருக்கிறது. பாலகோட்டில் நடத்தப்பட்ட வான் வழி தாக்குதல்கல்ளுக்கு பின், பாலம் விமான் நிலையத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் என்ன கூறினார் தெரியுமா? ‘பாகிஸ்தான் ஒரு பெரும் தவறை செய்துவிட்டது. இதற்கான விலையை அவர்கள் தந்தாக வேண்டும்’ என்று சொன்னார். இத்தகைய அரசியல் துணிச்சலைப் பற்றிதான் நாங்கள் பேசுகிறோம்” எனத் தெரிவித்தாா்.

Speaking in Rajya Sabha during Operation Sindoor debate, BJP MP JP Nadda attacked the UPA govt: ”I'm reminding you of these events because you can only appreciate the significance of the full moon when you’ve understood the darkness of the new moon"

6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

ஈரானுடன் வர்த்தகம் மேற்கொண்ட இந்தியாவின் 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்து அந்நாட்டு உத்தரவிட்டுள்ளது.மத்திய கிழக்கில் மோதலை தூண்டிவிடுவதற்காக ஈரான் அரசு நிதியுதவி அளித்து வருவதாகவும் அமெரி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: திமுக வலியுறுத்தல்

நமது நிருபர் பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் முழு உண்மையையும் மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தியது.இது தொடர்பாக மாநிலங்களவையில் இரண்டாம் நாளாக புதன்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகம் தொடர்புடைய பிரச்னைகள் மற்றும் கேள்விகளை தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்பினர். அவற்றின் விவரம் வருமாறு:-மக்களவையில்...எம்.பி. தொகுதி நிதி ரூ. 5 கோடி; ஆனா... மேலும் பார்க்க

ஆகஸ்டில் 46 டிஎம்சி காவிரி நீர்: உறுதிப்படுத்த தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபர்உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் ஆகஸ்ட் மாதத்துக்குரிய 45.95 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆ... மேலும் பார்க்க

குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விசாரிக்க கிரிக்கெட் மைதானம்தான் தேவைப்படும்: செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

நமது நிருபர்முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளில் 2,000-க்கும் மேற்பட்டவர்களை குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்த்ததற்காக தமிழக அரசை உச்சநீதிமன்றம் புதன்கிழமை கடிந்து கொண்டது.மேலும், ... மேலும் பார்க்க

தில்லியில் எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழா: ஆக. 7- இல் பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழாவை மத்திய அரசுடன் இணைந்து தில்லியில் இரு நாள்கள் கொண்டாடப்பட இருப்பதாகவும், இந்த விழாவை ஆக. 7-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளதாகவும... மேலும் பார்க்க