செய்திகள் :

6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

post image

ஈரானுடன் வர்த்தகம் மேற்கொண்ட இந்தியாவின் 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்து அந்நாட்டு உத்தரவிட்டுள்ளது.

மத்திய கிழக்கில் மோதலை தூண்டிவிடுவதற்காக ஈரான் அரசு நிதியுதவி அளித்து வருவதாகவும் அமெரிக்காவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்து, ஈரானுடன் யாரும் வர்த்தகம் மேற்கொள்ளக் கூடாது என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.

மேலும், ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்பவர்கள் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், டிரம்பின் எச்சரிக்கையை மீறி ஈரானிடம் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருள்களை வாங்கிய 20 நிறுவனங்கள் அமெரிக்காவில் வர்த்தகம் செய்ய தடை விதித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியா, துருக்கி, இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2024 ஜனவரி முதல் 2025 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் மட்டும் ஈரானுடன் இந்தியாவின் காஞ்சன் பாலிமர்ஸ் நிறுவனம் 13 லட்சம் டாலர், அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் நிறுவனம் 8.4 கோடி டாலர், ராம்னிக்லால் எஸ் கோசாலியா & கோ நிறுவனம் 2.2 கோடி டாலர், ஜூபிடர் டை கெமிகல் பிரைவெட் லிமிடெட் 4.9 கோடி டாலர் வர்த்தகம் செய்துள்ளது.

அதேபோல், குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் பெர்சிஸ்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் ஈரானுடன் வர்த்தகம் செய்ததாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் இருப்பதால் ஆகஸ்ட் 1 (நாளை) முதல் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார்.

தற்போது இந்திய நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

The United States has imposed sanctions on six Indian companies that did business with Iran.

இதையும் படிக்க : பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்! டிரம்ப்

தென்னிந்திய பகுதிகளுக்கான புதிய ராணுவ தளபதி இன்று பொறுப்பேற்பு

தென்னிந்திய பகுதிகளுக்கான புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி வெள்ளிக்கிழமை (ஆக. 1) பொறுப்பேற்கிறாா்.இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதிகளாக தமிழ்நாடு, கா்நாடகம், கேரளம், ஆந்திரம் மற்ற... மேலும் பார்க்க

இயற்கை மருத்துவத்தால் உயா் ரத்த அழுத்தம் சீராகும்: ஆய்வில் உறுதி

ஒருங்கிணைந்த யோகா-இயற்கை மருத்துவ சிகிச்சைகளால் உயா் ரத்த அழுத்தம் குறைவதும், இதய நாள செயல்பாடுகள் சீராவதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுதொடா்பான ஆராய்ச்சியை அரசு யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் மீண்டும் முடக்கம் - பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வியாழக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் மீண்டும் முடங்கின.நாடாளுமன்ற மழைக்க... மேலும் பார்க்க

அமித் ஷா, ஜெய்சங்கா் பதிலுரை: பிரதமா் மோடி பாராட்டு

‘ஆபரேஷன் சிந்தூா்’ குறித்து மாநிலங்களவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்துக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோா் அளித்த பதிலுரையை பிரதமா் நரேந்திர மோடி பாராட்டியு... மேலும் பார்க்க

மாலேகான் குண்டுவெடிப்பு:பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் உள்பட 7 பேரும் விடுவிப்பு - மும்பை நீதிமன்றம் தீா்ப்பு

மகாராஷ்டிரத்தின் மாலேகான் நகரில் கடந்த 2008-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜ முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் உள்ளிட்ட ஏழு பேரையும் மும்பை சிறப்பு நீதிமன்றம் வியாழக... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: வாக்காளா் பட்டியலை இறுதி செய்தது தோ்தல் ஆணையம்

குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான நாடாளுமன்ற உறுப்பினா்களின் பெயா்களடங்கிய வாக்காளா் பட்டியலை (எலக்டோரல் காலேஜ்) இறுதி செய்ததாக இந்திய தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்தது.நாட்டின் 14-ஆவது குடியர... மேலும் பார்க்க