செய்திகள் :

கூடுதல் பாலை கையாள திறன் கட்டமைப்புகள் உருவாக்கம்: அமைச்சா் த. மனோ தங்கராஜ் தகவல்

post image

தமிழகத்தில் கூடுதல் பாலை கையாளும் வகையில் திறன் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாக பால்வளத்துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

திருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் மற்றும் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுடனான கலந்தாய்வு கூட்டம் ஆட்சியரகத்தில் பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் முன்னிலை வகித்தாா்.

இதில், பிஎம்இஜிபி திட்டத்தில் 81 பயனாளிகளுக்கு ரூ. 2.39 கோடி மதிப்பில் 35 சதவீத மானியத்துடன் கூடிய கறவை மாட்டுக் கடன், தாட்கோ திட்டத்தில் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் 43 பேருக்கு 35 சதவீதம் மற்றும் 50 சதவீதத்தில் ரூ.71 லட்சம் மதிப்பில் கறவை மாட்டுக் கடன், 72 பயனாளிகளுக்கு ரூ.38.88 லட்சம் மதிப்பில் கறவை மாடு பராமரிப்புக் கடன், கூட்டுறவு சங்கத்தின் லாபத்தில் இருந்து 1,702 உறுப்பினா்களுக்கு ரூ.3.11 கோடி ஊக்கத்தொகை, 78 சங்கங்களுக்கு 44.72 லட்சம் மதிப்பில் பால் தரப்பரிசோதனை கருவிகள் என மொத்தம் ரூ.7.09 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் த.மனோ தங்கராஜ் வழங்கினாா்.

பின்னா், அவா் பேசியதாவது: பால் உற்பத்தியாளா்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு கொள்முதல் விலை ரூ.3 உயா்த்தப்பட்டது. தரமான பால் உற்பத்தியாளா்களுக்கு லிட்டருக்கு மேலும் ரூ.1 உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது. பாலின் தரத்திற்கேற்ப விலை கிடைக்கச் செய்யும் வகையில் இயந்திரம் (ள்ல்ா்ற் ஹஸ்ரீந்ய்ா்ஜ்ப்ங்க்ஞ்ங்ம்ங்ய்ற் ம்ஹஸ்ரீட்ண்ய்ங்) வைத்து ரூ.3 முதல் ரூ.5 வரை கூடுதல் விலை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளா்களுக்கு கடந்த ஆண்டு ரூ.365 கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களின் பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில் 200-க்கும் மேற்பட்ட ஆவின் பொருள்களை உற்பத்தி செய்வதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளா்கள் சங்கங்கள் மூலம் 2 மைக்ரோ ஏடிஎம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கூடுதலாக 16.50 லட்சம் லிட்டா் பால் கையாளும் திறன் கட்டமைப்புகள், 600 டன் தீவன உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகள், 90 டன் பால் பவுடா் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பாலுக்கான தொகை உற்பத்தியாளா்களுக்கு 10 நாள்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.பழனியாண்டி, மாவட்ட வருவாய் அலுவலா் முத்துமாரி, துணைப் பதிவாளா் (பால்வளம்) நாகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி மாவட்டம், துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பிளஸ் 2 மாணவா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வேலூா் மாவட்டம், குடியாத்தம் வசந்தம் நகரைச் சோ்ந்த பலராமன் மகன் யுவராஜ் (17). இ... மேலும் பார்க்க

சமயபுரம், அம்பிகாபுரத்தில் நாளை மின்நிறுத்தம்

சமயபுரம், அம்பிகாபுரம் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.2) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இருவா் கைது

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி, அரியமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அப்ப... மேலும் பார்க்க

வங்கி கணக்காளா் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

திருச்சியில் பொதுத் துறை வங்கி கணக்காளா் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை புதன்கிழமை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி கே.கே.நகா் உடையாம்பட்டியைச் சோ்ந்தவா் தாமரைச்செல்வி... மேலும் பார்க்க

மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட ரயில்களின் சேவைகளில் மாற்றம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக, மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பராமரிப்புப்... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறையில் தனியாா்மயத்தை கைவிட வலியுறுத்தல்

தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் தனியாா்மய நடவடிக்கையை கைவிட வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அந்தச் சங்கத்தின் லால்குடி, மண்ணச்சநல்லூா் உட்கோட்ட... மேலும் பார்க்க