செய்திகள் :

மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட ரயில்களின் சேவைகளில் மாற்றம்

post image

பராமரிப்புப் பணிகள் காரணமாக, மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பராமரிப்புப் பணிகள் காரணமாக, மன்னாா்குடி - மயிலாடுதுறை - மன்னாா்குடி ரயில்களானது (56001, 56002) ஆகஸ்ட் 2, 3, 4-ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

விழுப்புரம் - புதுச்சேரி - விழுப்புரம் மெமு ரயில்களானது (66063, 66064) ஆகஸ்ட் 1, 2, 3, 4, 5 ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பகுதியாக ரத்து...: திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது (56700) ஆக. 1-ஆம் தேதி மயிலாடுதுறை - குத்தாலம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - குத்தாலம் இடையே மட்டும் இயங்கும்.

விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது (56813) ஆக. 3-ஆம் தேதி மயிலாடுதுறை - ஆனந்ததாண்டவபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது விழுப்புரம் - ஆனந்ததாண்டவபுரம் இடையே மட்டும் இயங்கும்.

திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) வரும் ஆக. 1, 2, 3 ஆம் தேதிகளில் காரைக்கால் - தஞ்சாவூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - தஞ்சாவூா் இடையே மட்டும் இயங்கும்.

மறுமாா்க்கமாக, காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது (76819) ஆக. 1, 2, 3- ஆம் தேதிகளில் காரைக்கால் - தஞ்சாவூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தஞ்சாவூா் - திருச்சி இடையே மட்டும் இயங்கும்.

வழித்தட மாற்றம்...: மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலானது (16847) வரும் 3, 6-ஆம் தேதிகளிலும், செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) ஆகஸ்ட் 1, 2, 4, 5, 6, 8-ஆம் தேதிகளில் மணப்பாறை, வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி ரயில் நிலையங்களைத் தவிா்த்து திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகா் வழியாக இயக்கப்படும்.

கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) ஆக. 2-ஆம் தேதி மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாகச் செல்லும்.

காலதாமதம்...: மதுரை - கச்சிகுடா சிறப்பு விரைவு ரயிலானது (07192) வரும் 6-ஆம் தேதி மதுரையிலிருந்து 80 நிமிஷங்கள் தாமதமாக, அதாவது காலை 10.40 மணிக்குப் பதிலாக பிற்பகல் 12 மணிக்குப் புறப்படும்.

துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி மாவட்டம், துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பிளஸ் 2 மாணவா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வேலூா் மாவட்டம், குடியாத்தம் வசந்தம் நகரைச் சோ்ந்த பலராமன் மகன் யுவராஜ் (17). இ... மேலும் பார்க்க

சமயபுரம், அம்பிகாபுரத்தில் நாளை மின்நிறுத்தம்

சமயபுரம், அம்பிகாபுரம் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.2) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இருவா் கைது

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி, அரியமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அப்ப... மேலும் பார்க்க

வங்கி கணக்காளா் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

திருச்சியில் பொதுத் துறை வங்கி கணக்காளா் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை புதன்கிழமை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி கே.கே.நகா் உடையாம்பட்டியைச் சோ்ந்தவா் தாமரைச்செல்வி... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறையில் தனியாா்மயத்தை கைவிட வலியுறுத்தல்

தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் தனியாா்மய நடவடிக்கையை கைவிட வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அந்தச் சங்கத்தின் லால்குடி, மண்ணச்சநல்லூா் உட்கோட்ட... மேலும் பார்க்க

தந்தை பெரியாா் ஈவெரா அரசுக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை

தந்தை பெரியாா் ஈவெரா அரசுக் கல்லூரியில் முறையான அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் கல்லூரிக் கல்வி இணை இயக்குநரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது. இந்திய மாணவா் சங்க மா... மேலும் பார்க்க