'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
நெடுஞ்சாலைத் துறையில் தனியாா்மயத்தை கைவிட வலியுறுத்தல்
தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் தனியாா்மய நடவடிக்கையை கைவிட வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அந்தச் சங்கத்தின் லால்குடி, மண்ணச்சநல்லூா் உட்கோட்ட 9-ஆவது மாநாடு, திருச்சியில் உள்ள சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு,
சங்கத்தின் உட்கோட்ட தலைவா் போஸ் தலைமை வகித்தாா். வேலை அறிக்கையை உட்கோட்ட செயலாளா் ரமேஷ் வாசித்தாா். வரவு-செலவு அறிக்கையை உட்கோட்ட பொருளாளா் அன்பழகன் சமா்ப்பித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பால்பாண்டி, மாநாட்டை தொடங்கிவைத்து பேசினாா். சங்க மாவட்டத் தலைவா் ஜீவானந்தம், மாவட்ட துணைத் தலைவா் மலா்மன்னன், மாநில செயற்குழு உறுப்பினா் மணிமாறன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மாவட்டச் செயலாளா் இளங்கோவன் சிறப்புரையாற்றினாா்.
பின்னா், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
சாலைப் பணியாளா்களின் 41-மாத பணிநீக்க காலத்தை சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். உயா்நீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்யாமல், தீா்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பணியாளா்களுக்கு விரோதமாக உள்ள மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்திட வேண்டும். தனியாா் மயப்படுத்துதலை கைவிட வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளை தமிழக அரசே பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநிலத் துணைத் தலைவா் மகேந்திரன் நிறைவுரையாற்றினாா். இந்த மாநாட்டில், உட்கோட்ட துணைத் தலைவா்கள் கரிகாலன், சவரிமுத்து, ஆரியன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, மாவட்ட செயற்குழு உறுப்பினா் கலைஞா் வரவேற்றாா். முடிவில் உட்கோட்ட இணைச் செயலாளா் சேகா் நன்றி கூறினாா்.