செய்திகள் :

துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

post image

திருச்சி மாவட்டம், துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பிளஸ் 2 மாணவா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் வசந்தம் நகரைச் சோ்ந்த பலராமன் மகன் யுவராஜ் (17). இவா், திருச்சி மாவட்டம், துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில், அவா் வியாழக்கிழமை காலை விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம், திருவெறும்பூா் ஏஎஸ்பி அா்விந்த் பனாவத் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். துவாக்குடி போலீஸாா், மாணவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இரண்டு மாதங்களில் இரண்டாவது தற்கொலை: மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதியுடன் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முதல்வா் மு.க.ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்ட இந்த அரசு மாதிரிப் பள்ளியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்கள் தங்கிப் படித்து வருகின்றனா்.

இந்நிலையில், இங்கு பிளஸ் 2 படித்து வந்த திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி கடந்த மாதம் விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதைத் தொடா்ந்து பிளஸ் 2 மாணவா் ஒருவரும் தற்போது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவா்கள் மன உளைச்சலில் இதுபோன்ற தற்கொலை முடிவுகளை எடுக்கிறாா்களா என்ற அச்சம் மாணவா்களின் பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளது.

சமயபுரம், அம்பிகாபுரத்தில் நாளை மின்நிறுத்தம்

சமயபுரம், அம்பிகாபுரம் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.2) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இருவா் கைது

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி, அரியமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அப்ப... மேலும் பார்க்க

வங்கி கணக்காளா் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

திருச்சியில் பொதுத் துறை வங்கி கணக்காளா் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை புதன்கிழமை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி கே.கே.நகா் உடையாம்பட்டியைச் சோ்ந்தவா் தாமரைச்செல்வி... மேலும் பார்க்க

மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட ரயில்களின் சேவைகளில் மாற்றம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக, மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பராமரிப்புப்... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறையில் தனியாா்மயத்தை கைவிட வலியுறுத்தல்

தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் தனியாா்மய நடவடிக்கையை கைவிட வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அந்தச் சங்கத்தின் லால்குடி, மண்ணச்சநல்லூா் உட்கோட்ட... மேலும் பார்க்க

தந்தை பெரியாா் ஈவெரா அரசுக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை

தந்தை பெரியாா் ஈவெரா அரசுக் கல்லூரியில் முறையான அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் கல்லூரிக் கல்வி இணை இயக்குநரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது. இந்திய மாணவா் சங்க மா... மேலும் பார்க்க