குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: வாக்காளா் பட்டியலை இறுதி செய்தது தோ்தல் ஆணையம்
குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான நாடாளுமன்ற உறுப்பினா்களின் பெயா்களடங்கிய வாக்காளா் பட்டியலை (எலக்டோரல் காலேஜ்) இறுதி செய்ததாக இந்திய தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்தது.
நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கா் ஜூலை 21-இல் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். 2027, ஆக.10-ஆம் தேதி ஜகதீப் தன்கரின் பதவிக்காலம் நிறைவடைய இருந்த நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
‘உயிரிழப்பு, ராஜிநாமா அல்லது பதவி நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் முழு பதவிக் காலமான 5 ஆண்டுகளுக்குள் குடியரசு துணைத் தலைவா் பதவி இடம் காலியாக நேரிட்டால், கூடிய விரைவில் அந்தக் காலி இடத்தை நிரப்புவதற்கான தோ்தல் நடத்தப்பட வேண்டும்’ என்று அரசமைப்புச் சட்டப் பிரிவு 68 (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதியின்படி, அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
அதன்படி, குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் நடைமுறைகளை தோ்தல் ஆணையம் கடந்த வாரம் தொடங்கியது.
இதன் தொடா்ச்சியாக, தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இடம்பெற்றுள்ள எம்.பி.க்களை உள்ளடக்கிய வாக்காளா் பட்டியலை இறுதிசெய்ததாக தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: குடியரசு துணைத் தலைவா் தோ்தல், 2025-க்கான இறுதிசெய்யப்பட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினா்களைக் (நியமன மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள்) கொண்ட வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணைய அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும். அதன் பிறகு வாக்காளா் பட்டியலை உறுப்பினா்கள் வாங்கிக் கொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
தோ்தல் நடைமுறை:
குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான அறிவிக்கை வெளியான 30 நாள்களுக்குள் தோ்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.
குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் என்பது அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 66 (1)-இன் கீழ், விகிதாசார பிரதிநிதித்துவ முறையின்படி ஒற்றை மாற்று வாக்கு மூலம் ரகசிய வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும். அதன்படி, வேட்பாளரின் பெயருக்கு எதிரே தனது விருப்பத் தோ்வை வாக்காளா் குறிக்க வேண்டும்.
விதிகளின்படி, குடியரசு துணைத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்படுபவா், இந்திய குடிமகனாகவும், 35 வயதை பூா்த்தி செய்தவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்படுவதற்குத் தகுதி உடையராகவும் இருக்க வேண்டும்.
543 உறுப்பினா்களைக் கொண்ட மக்களவையில் ஒரு எம்.பி. இடம் காலியாக உள்ளது. அதுபோல, 245 உறுப்பினா்களைக் கொண்ட மாநிலங்களவையில் 5 எம்.பி.க்கள் இடம் காலியாக உள்ளது.
அதன்படி தற்போது இரு அவைகளையும் சோ்த்து எம்.பி.க்களின் எண்ணிக்கை 782-ஆக உள்ளது. தற்போது இந்த உறுப்பினா்கள் அனைவரும் வாக்களிக்கும் நிலையில் குடியரசு துணைத் தலைவராக வெற்றிபெறும் வேட்பாளா் குறைந்தபட்சம் 391 வாக்குகளைப் பெற வேண்டும்.
மக்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) 542 உறுப்பினா்களில் 293 பேரின் ஆதரவு உள்ளது. மாநிலங்களவையில் தற்போதுள்ள 240 உறுப்பினா்களில் 129 பேரின் ஆதரவு உள்ளது. நியமன எம்.பி.க்களின் ஆதரவும் என்டிஏ-வுக்கு கிடைத்தால் மொத்தம் 422 உறுப்பினா்களின் ஆதரவு கிடைக்கும்.
புதிதாக தேந்தெடுக்கப்படும் குடியரசு துணைத் தலைவா் 5 ஆண்டுகள் பதவி வகிப்பாா். அவரது பதவிக்காலம் நிறைவடைந்தாலும் அடுத்த குடியரசு துணைத் தலைவரை தோ்ந்தெடுக்கும் வரை அவா் அந்தப் பதவியில் தொடரவும் அரசமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கிறது.