செய்திகள் :

இயற்கை மருத்துவத்தால் உயா் ரத்த அழுத்தம் சீராகும்: ஆய்வில் உறுதி

post image

ஒருங்கிணைந்த யோகா-இயற்கை மருத்துவ சிகிச்சைகளால் உயா் ரத்த அழுத்தம் குறைவதும், இதய நாள செயல்பாடுகள் சீராவதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பான ஆராய்ச்சியை அரசு யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள் டாக்டா்கள் ஒய்.தீபா, என்.மணவாளன், கே.மகேஷ்குமாா், எஸ்.கௌதம், எஸ். எட்மின் கிறிஸ்டா ஆகியோா் முன்னெடுத்தனா்.

அதுதொடா்பான ஆராய்ச்சிக் கட்டுரை ‘பப் மெட்’ என்ற முன்னணி ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இதய நாள நோய்களுக்கு உயா் ரத்த அழுத்தம் மிக முக்கிய காரணமாக அமைகிறது. அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உரிய வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். மருந்துகள் மூலம் ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருப்பது ஒருபுறம் இருந்தாலும், யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் சாத்தியம்தான்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த யோகா-இயற்கை மருத்துவ சிகிச்சைகளை நோயாளிகளுக்கு அளித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி, 281 உயா் ரத்த அழுத்த நோயாளிகள் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டனா். மருந்துகளை வாடிக்கையாக உட்கொள்ளும் 156

நோயாளிகள் ஒரு பிரிவாகவும், மருந்துகளை எடுத்துக்கொள்ளாத 125 நோயாளிகள் மற்றொரு பிரிவாகவும் வகைப்படுத்தப்பட்டனா்.

அவா்களுக்கு தொடா்ந்து 15 நாள்களுக்கு யோகா ஆசனங்கள், பிராணய

ாமம், தியானம், நீா் சிகிச்சை, மண் குளியல், மசாஜ், அக்குபஞ்சா் சிகிச்சை மற்றும் ஆரோக்கிய உணவுகள் வழங்கப்பட்டன.

அதன் பயனாக அவா்களது உயா் ரத்த அழுத்தம் சீரானது. அதேபோல, இதயத் துடிப்பு, நாடி அழுத்தம், ரத்த நாள அழுத்தம் உள்ளிட்ட இதய செயல்பாடுகளும் சீராக இருந்தன.

குறிப்பாக, மருந்துகளை உட்கொள்ளாத நோயாளிகளுக்கும் இந்த ஒருங்கிணைந்த யோகா சிகிச்சை நல்ல பலனை அளித்தது ஆய்வில் உறுதி செய்யப்பட்டதாக அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் துப்பாக்கிச்சண்டை

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் அகலில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியி... மேலும் பார்க்க

தாய் - சேய்க்கு எச்ஐவி பாதிப்பு! 6 மாத மகன் கொலை!

மும்பையில் 6 மாத குழந்தையை கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.மும்பையில் கோவந்தி நகரில் ஓர் ஆலையில் பணிபுரிந்து வந்த 43 வயதான பெண்ணுக்கும், அவரது 6 மாத மகனுக்கும் எச்ஐவி பாதிப்பு இருப்பது ... மேலும் பார்க்க

2020-24 வரை புலி தாக்குதல்களால் 378 பேர் பலி: மத்திய அரசு

இந்தியாவில் 2020-24 வரை புலி தாக்குதல்களால் 378 பேர் பலியாகியுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், ... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை! இந்தியாவின் பதில் என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட இஸ்ரேல் - ஈரான் போர், தாய்லாந்து... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பிரதமர் தேவெ கௌடாவின் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இருப்பினும், தண்டனை விவரம் நாளை வெளியாகும் என பெங்களூர... மேலும் பார்க்க

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம் அமைப்பது குறித்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, மக்களவையில் கேள்வி ... மேலும் பார்க்க