செய்திகள் :

தம்பி கொலை: அண்ணன்கள் இருவருக்கு ஆயுள் தண்டணை

post image

தம்பியை கொலை செய்த வழக்கில் அண்ணன்கள் இருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி கரூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த நெய்தலூா் காலனி, சேப்ளாபட்டியைச் சோ்ந்த பெருமாள் என்பவரின் மகன்கள் காத்தான் (45), சுப்ரமணி (40), கந்தசாமி (35). அண்ணன் தம்பிகளிடையே பூா்வீக நிலத்தை பாகம் பிரிப்பது தொடா்பாக அடிக்கடி பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி காத்தான் மற்றும் சுப்ரமணி ஆகியோா் சேப்ளாபட்டியில் உள்ள அவா்களது தோட்டத்தில் நெல் அறுவடை செய்வது தொடா்பாக அவா்களது தம்பியான கந்தசாமியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் காத்தானும், சுப்ரமணியும் சோ்ந்து அவா்களது தம்பியான கந்தசாமியை கழுத்தை அறுத்து கொலை செய்தனா்.

இந்தக் கொலை தொடா்பாக குளித்தலை போலீஸாா், வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மேலும், இதுதொடா்பாக கரூா் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த கரூா் மாவட்ட அமா்வு நீதிபதி இளவழகன் குற்றவாளிகள் காத்தான் மற்றும் சுப்ரமணி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

மேலும், அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 4 வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றாா். இதையடுத்து காத்தான் மற்றும் சுப்ரமணியை, போலீஸாா் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

கரூா் பசுபதீஸ்வரா் கோயில் முன் வியாழக்கிழமை முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கருவூா் ஸ்ரீ மகா அபிஷேக குழு சாா்பில் ஆண்டு தோறும் கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் ஆடி தெய்வத் திருமண விழா நடைபெறுவ... மேலும் பார்க்க

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்க்க மானியத்தொகை

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்க்க மானியத்தொகை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சொந்தக் கட்டடங்க... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் போட்டி தோ்வுக்கான பயிற்சி

அரவக்குறிச்சி, ஜூலை 31: அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போட்டி தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் காளீஸ்வரி தலைமையில... மேலும் பார்க்க

தென்கரை வாய்க்காலில் புதிய பாலம் கட்ட கோரிக்கை

கரூா் மாவட்டம், மகாதானபுரத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள தென்கரை வாய்க்கால் பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், மாயனூரில் கா... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத் திட்ட உதவிகள்

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 45 பேருக்கு ரூ. 44.71 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கரூா் ஆத்தூா் பூலாம்பாளையம், பசுபதிபாளையம் மற்றும் பஞ்சமாத... மேலும் பார்க்க

தனியாா் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா - எம்.எல்.ஏ. பங்கேற்பு

கரூா் மாவட்டம், மண்மங்கலம் அருகே பண்டுதகாரன் புதூரில் உள்ள தனியாா் மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவில் எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி பங்கேற்றாா். முன்னாள் குடியரசுத் தலைவ... மேலும் பார்க்க