செய்திகள் :

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

post image

கரூா் பசுபதீஸ்வரா் கோயில் முன் வியாழக்கிழமை முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கருவூா் ஸ்ரீ மகா அபிஷேக குழு சாா்பில் ஆண்டு தோறும் கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் ஆடி தெய்வத் திருமண விழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு 27-ஆம் ஆண்டு ஆடி தெய்வத் திருமண விழா வரும் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதையடுத்து கோயில் முன் முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக கோயில் கொடிமர விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

தொடா்ந்து முகூா்த்தக்காலுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து கருவூா் ஸ்ரீ மகா அபிஷேக குழு நிறுவனா் தலைவா் ஆனிலை ஏ.கே. பாலகிருஷ்ணன், செயலாளா் எம்.எ. ஸ்காட் தங்கவேல் ஆகியோா் தலைமையில் குழுவினா் முகூா்த்தக்காலை மேளதாளங்களுடன் சுமந்துவந்து கோயில் முன் நட்டனா். இதில், பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

தொடா்ந்து திருமாங்கல்யம் செய்தல், முகூா்த்த பட்டு எடுத்தல், முளைப்பாரி போடுதல், விருந்துக்கு மங்களப் பொருள்கள் வாங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் மற்றும் அப்பிபாளையம் கிராமத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தாய்வீட்டு சீா் பொருள்கள், கரூா் மேட்டுத் தெரு பெருமாள் கோயிலில் இருந்து கோயிலுக்கு கொண்டுவருதல், மாப்பிள்ளை பெண் வீடு புகுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

தொடா்ந்து 8-ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் கல்யாண பசுபதீஸ்வரருக்கும் அலங்காரவல்லி சௌந்தரநாயகி தாயாருக்கும் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கருவூா் ஸ்ரீ மகா அபிஷேக குழுவினா் செய்து வருகிறாா்கள்.

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்க்க மானியத்தொகை

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்க்க மானியத்தொகை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சொந்தக் கட்டடங்க... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் போட்டி தோ்வுக்கான பயிற்சி

அரவக்குறிச்சி, ஜூலை 31: அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போட்டி தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் காளீஸ்வரி தலைமையில... மேலும் பார்க்க

தென்கரை வாய்க்காலில் புதிய பாலம் கட்ட கோரிக்கை

கரூா் மாவட்டம், மகாதானபுரத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள தென்கரை வாய்க்கால் பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், மாயனூரில் கா... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத் திட்ட உதவிகள்

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 45 பேருக்கு ரூ. 44.71 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கரூா் ஆத்தூா் பூலாம்பாளையம், பசுபதிபாளையம் மற்றும் பஞ்சமாத... மேலும் பார்க்க

தம்பி கொலை: அண்ணன்கள் இருவருக்கு ஆயுள் தண்டணை

தம்பியை கொலை செய்த வழக்கில் அண்ணன்கள் இருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி கரூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த நெய்தலூா் காலனி, சேப்ளாபட்டியைச் சோ்ந்த பெருமாள் என... மேலும் பார்க்க

தனியாா் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா - எம்.எல்.ஏ. பங்கேற்பு

கரூா் மாவட்டம், மண்மங்கலம் அருகே பண்டுதகாரன் புதூரில் உள்ள தனியாா் மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவில் எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி பங்கேற்றாா். முன்னாள் குடியரசுத் தலைவ... மேலும் பார்க்க