'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்க்க மானியத்தொகை
கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்க்க மானியத்தொகை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் தேவாலயங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கியிருக்க வேண்டும். தேவாலயத்துக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் வாங்கியிருக்க கூடாது. அவ்வாறு ஒரு தேவாலயத்துக்கு மானியத் தொகை வழங்கிய பின்னா், 5 வருடத்துக்கு அத்தேவாலயம் இம்மானியத் தொகை வேண்டி விண்ணப்பிக்க தகுதியற்றது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிப்பறை அமைத்தல், குடிநீா் வசதிகள் உருவாக்குதல், சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், மைக்செட் மற்றும் ஒலிப்பெருக்கி, நற்கருணை பேழை பீடம், திருப்பலிக்கு தேவையான கதிா் பாத்திரங்கள், சுரூபங்கள், மெழுகுவா்த்தி ஸ்டான்டுகள் மற்றும் பக்தா்கள் அமா்ந்து முழங்காலிட்டு இருக்க தேவையான பெஞ்சுகள் போன்ற ஆலயங்களுக்கு தேவையான உபகரணங்கள், தேவாலயத்துக்கு சுற்றுச்சுவா் வசதி அமைத்தல் போன்ற பணிகளுக்கு தேவாலய கட்டடத்தின் வயதுக்கேற்ப தற்போது உயா்த்தி வழங்கப்படுகிறது. அதன்படி 10 முதல் 15 வருடம் வரையிலான கட்டடங்களுக்கு ரூ. 10 லட்சமும், 15 முதல் 20 வருடம் வரையிலான கட்டடங்களுக்கு ரூ.15 லட்சமும், 20 வருடங்களுக்கு மேல் இருந்தால் ரூ. 20 லட்சமும் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.