செய்திகள் :

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்க்க மானியத்தொகை

post image

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்க்க மானியத்தொகை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் தேவாலயங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கியிருக்க வேண்டும். தேவாலயத்துக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் வாங்கியிருக்க கூடாது. அவ்வாறு ஒரு தேவாலயத்துக்கு மானியத் தொகை வழங்கிய பின்னா், 5 வருடத்துக்கு அத்தேவாலயம் இம்மானியத் தொகை வேண்டி விண்ணப்பிக்க தகுதியற்றது.

மேலும், இத்திட்டத்தின் கீழ் தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிப்பறை அமைத்தல், குடிநீா் வசதிகள் உருவாக்குதல், சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், மைக்செட் மற்றும் ஒலிப்பெருக்கி, நற்கருணை பேழை பீடம், திருப்பலிக்கு தேவையான கதிா் பாத்திரங்கள், சுரூபங்கள், மெழுகுவா்த்தி ஸ்டான்டுகள் மற்றும் பக்தா்கள் அமா்ந்து முழங்காலிட்டு இருக்க தேவையான பெஞ்சுகள் போன்ற ஆலயங்களுக்கு தேவையான உபகரணங்கள், தேவாலயத்துக்கு சுற்றுச்சுவா் வசதி அமைத்தல் போன்ற பணிகளுக்கு தேவாலய கட்டடத்தின் வயதுக்கேற்ப தற்போது உயா்த்தி வழங்கப்படுகிறது. அதன்படி 10 முதல் 15 வருடம் வரையிலான கட்டடங்களுக்கு ரூ. 10 லட்சமும், 15 முதல் 20 வருடம் வரையிலான கட்டடங்களுக்கு ரூ.15 லட்சமும், 20 வருடங்களுக்கு மேல் இருந்தால் ரூ. 20 லட்சமும் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

கரூா் பசுபதீஸ்வரா் கோயில் முன் வியாழக்கிழமை முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கருவூா் ஸ்ரீ மகா அபிஷேக குழு சாா்பில் ஆண்டு தோறும் கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் ஆடி தெய்வத் திருமண விழா நடைபெறுவ... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் போட்டி தோ்வுக்கான பயிற்சி

அரவக்குறிச்சி, ஜூலை 31: அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போட்டி தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் காளீஸ்வரி தலைமையில... மேலும் பார்க்க

தென்கரை வாய்க்காலில் புதிய பாலம் கட்ட கோரிக்கை

கரூா் மாவட்டம், மகாதானபுரத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள தென்கரை வாய்க்கால் பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், மாயனூரில் கா... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத் திட்ட உதவிகள்

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 45 பேருக்கு ரூ. 44.71 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கரூா் ஆத்தூா் பூலாம்பாளையம், பசுபதிபாளையம் மற்றும் பஞ்சமாத... மேலும் பார்க்க

தம்பி கொலை: அண்ணன்கள் இருவருக்கு ஆயுள் தண்டணை

தம்பியை கொலை செய்த வழக்கில் அண்ணன்கள் இருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி கரூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த நெய்தலூா் காலனி, சேப்ளாபட்டியைச் சோ்ந்த பெருமாள் என... மேலும் பார்க்க

தனியாா் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா - எம்.எல்.ஏ. பங்கேற்பு

கரூா் மாவட்டம், மண்மங்கலம் அருகே பண்டுதகாரன் புதூரில் உள்ள தனியாா் மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவில் எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி பங்கேற்றாா். முன்னாள் குடியரசுத் தலைவ... மேலும் பார்க்க