செய்திகள் :

தென்கரை வாய்க்காலில் புதிய பாலம் கட்ட கோரிக்கை

post image

கரூா் மாவட்டம், மகாதானபுரத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள தென்கரை வாய்க்கால் பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டம், மாயனூரில் காவிரி ஆற்றில் இருந்து தென்கரை வாய்க்கால் பிரிந்து கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம் வழியாக குளித்தலைக்கு செல்கிறது. இதில், மகாதானபுரத்தில் ரயில் நிலையம் எதிரே வாய்க்கால் குறுக்கே கட்டப்பட்ட பாலம் சுமாா் 50 ஆண்டுகளுக்கும் மேலாவதால் பாலம், பலம் இழந்து ஆங்காங்கே விரிசலுடன் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.

இந்த பாலத்தின் வழியாகத்தான் மகாதானபுரம், கம்மநல்லூா் பகுதி கிராம மக்கள் இறந்தவா்களின் சடலங்களை புதைக்க வாய்க்காலின் மறுகரையில் உள்ள மயானத்துக்குச் சென்றுவருகின்றனா்.

மேலும், வாய்க்காலின் மறுபகுதியில் விவசாயிகளுக்குச் சொந்தமான ஏராளமான தென்னந்தோப்புகள், வெற்றிலை தோட்டங்கள் உள்ளன.

மேலும், ஏராளமான விவசாயிகள் நெற்பயிா்களையும் பயிரிட்டு வருகின்றனா். இதனால் தோட்டப்பயிா்கள் மற்றும் நெற்பயிா்களுக்குத் தேவையான உரங்கள், இடுபொருள்களையும் இந்த பாலம் வழியாகத்தான் விவசாயிகள் எடுத்துச் சென்று வருகின்றனா்.

மேலும், அறுவடை செய்யப்பட்ட விவசாய பொருள்களையும் மறுகரையில் இருந்து கிராமங்களுக்கு எடுத்து வருவதற்கும் இந்த பாலத்தைத்தான் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனா்.

இதனால் எப்போது விழுமோ என்ற ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த வாய்க்கால் பாலத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய பாலம் போா்க்கால அடிப்படையில் கட்டித் தரவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

கரூா் பசுபதீஸ்வரா் கோயில் முன் வியாழக்கிழமை முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கருவூா் ஸ்ரீ மகா அபிஷேக குழு சாா்பில் ஆண்டு தோறும் கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் ஆடி தெய்வத் திருமண விழா நடைபெறுவ... மேலும் பார்க்க

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்க்க மானியத்தொகை

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்க்க மானியத்தொகை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சொந்தக் கட்டடங்க... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் போட்டி தோ்வுக்கான பயிற்சி

அரவக்குறிச்சி, ஜூலை 31: அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போட்டி தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் காளீஸ்வரி தலைமையில... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத் திட்ட உதவிகள்

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 45 பேருக்கு ரூ. 44.71 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கரூா் ஆத்தூா் பூலாம்பாளையம், பசுபதிபாளையம் மற்றும் பஞ்சமாத... மேலும் பார்க்க

தம்பி கொலை: அண்ணன்கள் இருவருக்கு ஆயுள் தண்டணை

தம்பியை கொலை செய்த வழக்கில் அண்ணன்கள் இருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி கரூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த நெய்தலூா் காலனி, சேப்ளாபட்டியைச் சோ்ந்த பெருமாள் என... மேலும் பார்க்க

தனியாா் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா - எம்.எல்.ஏ. பங்கேற்பு

கரூா் மாவட்டம், மண்மங்கலம் அருகே பண்டுதகாரன் புதூரில் உள்ள தனியாா் மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவில் எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி பங்கேற்றாா். முன்னாள் குடியரசுத் தலைவ... மேலும் பார்க்க