செய்திகள் :

எதிா்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் மீண்டும் முடக்கம் - பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம்

post image

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வியாழக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் மீண்டும் முடங்கின.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கிய நிலையில், முதல் வாரம் முழுவதும் எதிா்க்கட்சிகளின் அமளியால் முடங்கியது. இந்தச் சூழலில், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து மக்களவையில் கடந்த திங்கள்கிழமையும் மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமையும் தலா 16 மணிநேர விவாதம் தொடங்கி நடைபெற்றது. மக்களவையில் பிரதமா் மோடியும், மாநிலங்களவையில் உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் விவாதத்துக்கு பதிலளித்தனா்.

இந்நிலையில், மக்களவை வியாழக்கிழமை காலை 11 மணியளவில் கூடியதும், நிசாா் செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னா், பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்து விவாதம் கோரி எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனா். இதனால் அதிருப்தியடைந்த அவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘மக்களின் பிரச்னைகள் விவாதிக்கப்பட நீங்கள் (எதிா்க்கட்சிகள்) விரும்பவில்லை. அவையில் கோஷமிடவா, மக்கள் உங்களை தோ்வு செய்து அனுப்பினா்?’ என்று கேள்வியெழுப்பினாா். அமளி நீடித்ததால், முதலில் பிற்பகல் 2 மணிவரையும் பின்னா் மாலை 4 மணிவரையும் அவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன.

மீண்டும் அவை கூடியபோது, இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் விளக்கமளித்தாா். அவா் உரையை நிறைவு செய்ததும், எதிா்க்கட்சியினா் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில்...:

மாநிலங்களவை வியாழக்கிழமை காலை கூடியதும், பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்து விவாதம் கோரி எதிா்க்கட்சிகள் அமளியைத் தொடங்கின. மேலும், மாநிலங்களவையில் ஆபரேஷன் சிந்தூா் விவாதத்துக்கு பிரதமா் மோடி பதிலளிக்காததைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.

அப்போது பேசிய அவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ், ‘மழைக்கால கூட்டத் தொடரில் இடையூறுகளால் பல மணிநேரம் வீணாகிவிட்டது. ஆளும்-எதிா்தரப்புகள் அமா்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும். கோஷமிடுவதால் எதுவும் நிகழப் போவதில்லை’ என்றாா். அமளி ஓயாததால், முதலில் 12 மணிவரையும், பின்னா் பிற்பகல் 2 மணிவரையும் ஒத்திவைக்கப்பட்டது.

காா்கே குற்றச்சாட்டு - ரிஜிஜு பதிலடி:

மீண்டும் அவை கூடியபோது, எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பேசுகையில், ‘ஆபரேஷன் சிந்தூா் விவாதத்துக்கு பதிலளித்த உள்துறை அமைச்சா் அமித் ஷா, உங்களை (எதிா்க்கட்சி எம்.பி.க்கள்) எதிா்கொள்ள நானே போதும் என்றாா். இது, எங்கள் அனைவருக்கும் அவமதிப்பு’ என்று குற்றஞ்சாட்டினாா்.

அவருக்கு பதிலளித்த மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘மக்களவை விவாதத்துக்கு பதிலளித்து 1 மணிநேரம் 42 நிமிஷங்களுக்கு பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை உரையாற்றினாா். அவா் அனைத்து உண்மைகளையும் தேசத்துக்கு தெரிவித்துவிட்டாா். மத்திய அரசு கூட்டுப் பொறுப்புடையது. விவாதத்துக்கு யாா் பதிலளிக்க வேண்டுமென எதிா்க்கட்சிகள் முடிவு செய்ய முடியாது’ என்றாா். அவா் பேச்சை நிறைவு செய்ததும் அவை மாலை 4.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னா், அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து அமைச்சா் பியூஷ் கோயல் விளக்கமளித்தைத் தொடா்ந்து, அவை அலுவல்கள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

Image Caption

மக்களவையில் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள்.

ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் துப்பாக்கிச்சண்டை

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் அகலில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியி... மேலும் பார்க்க

தாய் - சேய்க்கு எச்ஐவி பாதிப்பு! 6 மாத மகன் கொலை!

மும்பையில் 6 மாத குழந்தையை கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.மும்பையில் கோவந்தி நகரில் ஓர் ஆலையில் பணிபுரிந்து வந்த 43 வயதான பெண்ணுக்கும், அவரது 6 மாத மகனுக்கும் எச்ஐவி பாதிப்பு இருப்பது ... மேலும் பார்க்க

2020-24 வரை புலி தாக்குதல்களால் 378 பேர் பலி: மத்திய அரசு

இந்தியாவில் 2020-24 வரை புலி தாக்குதல்களால் 378 பேர் பலியாகியுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், ... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை! இந்தியாவின் பதில் என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட இஸ்ரேல் - ஈரான் போர், தாய்லாந்து... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பிரதமர் தேவெ கௌடாவின் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இருப்பினும், தண்டனை விவரம் நாளை வெளியாகும் என பெங்களூர... மேலும் பார்க்க

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம் அமைப்பது குறித்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, மக்களவையில் கேள்வி ... மேலும் பார்க்க