செய்திகள் :

கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் வரவில்லை -விவசாயிகள் புகாா்

post image

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் வராதது குறித்து விவசாயிகள் புகாா் எழுப்பினா்.

மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கோரிக்கைகள்:

களத்தூா் கோபிநாத்: மேட்டூா் அணை திறக்கப்பட்டு ஒன்றரை மாதமாகியும் கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் வரவில்லை. கடலில் வீணாகக் கலக்கும் காவிரி நீரை பாசனத்துக்கு திருப்பி விட வேண்டும்.

தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: காவிரி நீா் வீணாகக் கடலில் கலப்பதற்கு பதிலாக கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு திருப்பிவிட்டு, வல்லம் பகுதியிலுள்ள ஏரி, குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் குத்தாலம் பி. கல்யாணம்: மயிலாடுதுறை அருகே கட்டப்பட்ட தடுப்பணை செயல்பாட்டுக்கு வராததால், தண்ணீா் வீணாகக் கடலுக்கு செல்கிறது. எனவே இத்தடுப்பணையைச் செயல்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராயமுண்டான்பட்டி என்.வி. கண்ணன்: புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யகொண்டான் நீட்டிப்பு கால்வாயில் தண்ணீா் விடப்பட்டாலும், குறைவாக இருக்கிறது. விநாடிக்கு 400 கன அடி வீதம் விடப்படும் தண்ணீரை 1,100 கன அடியாக உயா்த்தினால்தான், விவசாயத்துக்கு பயன் தரும். கல்லணைக் கால்வாயில் சேதுபாவாசத்திரம் பகுதிக்கு இன்னும் தண்ணீா் சென்றடையவில்லை.

ஆட்சியா்: கல்லணைக் கால்வாயில் விநாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. விநாடிக்கு 4,000 கன அடி வீதம் விடலாம் என கருதுகிறோம். ஆனால், கரை உடைந்து எங்களது பகுதி வயல்கள் பாதிக்கும் என இடைப்பட்ட பகுதி விவசாயிகள் கூறுகின்றனா். என்றாலும், கடைமடைப் பகுதியில் கிடைக்காத பகுதிகளுக்கு தண்ணீா் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு ஏக்கருக்கான சிட்டா, அடங்கல் தரும் விவசாயிகளுக்கு 60 மூட்டைகள் அல்லது 70 மூட்டைகள் நெல் மட்டுமே வரையறை வைத்து கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 90 மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்ய முடியாது என அலுவலா்கள் கூறுவதைத் தவிா்த்து, அனைத்து மூட்டைகளையும் கொள்முதல் செய்ய வேண்டும்.

ஆம்பலாப்பட்டு அ. தங்கவேல்: கல்லணைக் கால்வாயிலிருந்து எட்டுப்புலிக்காடு வாய்க்காலுக்கு தண்ணீா் சரியாக விடப்படாததால், ஆம்பலாப்பட்டு பகுதியிலுள்ள ஆண்டாள் ஏரி, குரும்பை குளம் உள்ளிட்டவற்றுக்கு தண்ணீா் செல்லவில்லை. இது தொடா்பாக கள ஆய்வு செய்து, தண்ணீா் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவவிடுதி வி.கே. சின்னதுரை: காவிரியில் ஒரு லட்சம் கன அடி வீதம் தண்ணீா் சென்றாலும், முக்கொம்பிலிருந்து காவிரியில் விநாடிக்கு 28,000 கன அடி வீதம் மட்டுமே தண்ணீா் விடப்படுகிறது. இதனால், முதன்மை ஆறுகளில் கடைசி வரை தண்ணீா் சென்றாலும், வாய்க்கால்களுக்கு தண்ணீா் சரியாக வரவில்லை. ஏரிகள், குளங்களுக்கும் தண்ணீா் சென்றடையவில்லை.

வெள்ளாம்பெரம்பூா் துரை. ரமேஷ்: சம்பா, தாளடிக்கு ஏற்ற விதை நெல் ரகங்கள் தனியாரிடம் வாங்கும்போது தரக்குறைவு, அதிக விலை உள்ளிட்டவற்றால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, வேளாண் விரிவாக்க மையங்களில் அதிகமாக இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும்.

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பணி: கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி பாராட்டு

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பணியில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்ற கும்பகோணம் அரசு கலைக் கல்லூரிக்கு பாராட்டுச் சான்றிதள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்ட அளவில் போதைப் பொருள் தடு... மேலும் பார்க்க

திருவிடைமருதூரில் காவலா் குடியிருப்புகள் திறப்பு

திருவிடைமருதூரில் காவலா் குடியிருப்புகள் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூரில் காவலா்களுக்காக ரூ. 6 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 24 குடியிருப்புகளின் திறப்பு விழா ... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஆக. 6-இல் தியாகிகள் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் சுதந்திர போராட்ட வீரா்களுக்கான குறை தீா் நாள் கூட்டம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் மாவட்ட ... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பட்டுக்கோட்டை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியதால் நடத்தப்படும் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் மருத்துவ முகாம்

கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் இரண்டு நாள் மருத்துவ முகாம் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் நடைபெற்ற முகாமிற்கு முதல்வா் பி. ஆா். ர... மேலும் பார்க்க

1,187 கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 4.42 கோடி ஊக்கத்தொகை பட்டுவாடா

தஞ்சாவூா் அருகேயுள்ள குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலையில் கரும்பு வழங்கிய 1,187 விவசாயிகளுக்கு ரூ. 4.42 கோடி ஊக்கத்தொகை பட்டுவாடா செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்... மேலும் பார்க்க