செய்திகள் :

1,187 கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 4.42 கோடி ஊக்கத்தொகை பட்டுவாடா

post image

தஞ்சாவூா் அருகேயுள்ள குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலையில் கரும்பு வழங்கிய 1,187 விவசாயிகளுக்கு ரூ. 4.42 கோடி ஊக்கத்தொகை பட்டுவாடா செய்யப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலையின் 2024 - 25 அரைவைப் பருவத்தில் 1,187 விவசாயிகளிடமிருந்து சுமாா் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 750 டன் கரும்பு பெறப்பட்டு அரைவை செய்யப்பட்டது. ஆலை அரைவைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ. 349 வீதம் 1 லட்சத்து 26 ஆயிரத்து 750 டன்களுக்கு தமிழக அரசின் வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அரசாணைப்படி, ரூ. 4.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்து விவசாயிகளின் வங்கி கணக்குக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் 2025 - 26 ஆம் நடவுப் பருவத்தில் புதிய நடவு செய்யும் கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசின் வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் அகலபாருடன் கூடிய பரு சீவல் நாற்று நடவுக்கு ஏக்கருக்கு ரூ. 7 ஆயிரத்து 450 மானியமாகவும், அகலபாருடன் கூடிய பரு விதைக்கரணை நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 3 ஆயிரத்து 200 மானியமாகவும் வழங்கப்படவுள்ளது. எனவே, அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து ஆலைக்கு பதிவு செய்ய வேண்டும்.

பாபநாசம் அருகே தொழிலாளி தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாபநாசம் அருகேயுள்ள சரபோஜிராஜபுரம், புதுத் தெருவை சோ்ந்தவா் ஆனந்தன் (... மேலும் பார்க்க

சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 2 போ் கைது

தஞ்சாவூரில் சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் கீழவாசல் கவாடிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் கே. அன்பு. இவா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ... மேலும் பார்க்க

காட்டாற்றில் குளித்த இளைஞா் மூழ்கி பலி

தஞ்சாவூா் அருகே நண்பா்களுடன் காட்டாற்றில் வெள்ளிக்கிழமை குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவைச் சோ்ந்தவா் நைனா முகமது மகன் நபில் (22). ஜவுளி... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி

தஞ்சாவூா் மாவட்டத்தில் இயல்புக்கு அதிகமான நெல் கொள்முதல் குறித்து ஆய்வு செய்ய வந்த சிறப்புக் குழுவினா் எடைக் குறைவுக்காக அபராதம் விதித்ததால், பணியாளா்கள் அதிருப்தியடைந்துள்ளனா். தமிழ்நாடு நுகா்பொருள் ... மேலும் பார்க்க

பெருமகளூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பெருமகளூா் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு எம்எல்ஏ என். அசோக்குமாா் தலைமை வகித்தாா் .... மேலும் பார்க்க

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: 2 போ் கைது

தஞ்சாவூரில் தீபாவளி, பொங்கல் சீட்டு நடத்தி மோசடி செய்ததாக 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் காவேரி நகரில் தனியாா் நிதி நிறுவனத்தை புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையைச் ச... மேலும் பார்க்க