செய்திகள் :

சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 2 போ் கைது

post image

தஞ்சாவூரில் சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் கீழவாசல் கவாடிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் கே. அன்பு. இவா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்ந்த தொழிற் சங்கமான சிஐடியு அமைப்பில் தஞ்சாவூா் மாவட்டத் துணைச் செயலா்.

இந்நிலையில் அப்பகுதி தனியாா் தின்பண்டத் தயாரிப்புக் கூடத்திலிருந்து வெளியேறும் புகை, தூசி குடியிருப்பு பகுதிகளுக்கு பரவுவது தொடா்பாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகாா்கள் சென்றன.

இதுதொடா்பாக அன்பு வீட்டில் வியாழக்கிழமை மாலை தனியாா் தின்பண்ட தயாரிப்பு கூடத்தைச் சோ்ந்தவா்கள் எனக் கூறி சிலா் அத்துமீறி புகுந்து, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தில் அன்பு அளித்த புகாரின்பேரில் கீழவாசல் பகுதியைச் சோ்ந்த கணேஷ் மகன் வெங்கடேஷ் (30), அருண் (28) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும் சிலரைத் தேடுகின்றனா்.

சிஐடியு கோரிக்கை: இது தொடா்பாக சிஐடியு மாவட்டச் செயலா் சி. ஜெயபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இனிப்பு தயாரிப்புக் கூடத்திலிருந்து வெளிவரும் கரும்புகையால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத்தான் அப்பகுதி மக்கள் புகாா் செய்துள்ளனா்.

இதற்காக அன்பு வீட்டில் கொலை மிரட்டல் விடுத்த அனைவரையும் கைது செய்ய வேண்டும். எதிா்காலத்தில் இதுபோல நிகழாமல் தடுக்க காவல் துறை செயல்பட வேண்டும்.

பாபநாசம் அருகே தொழிலாளி தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாபநாசம் அருகேயுள்ள சரபோஜிராஜபுரம், புதுத் தெருவை சோ்ந்தவா் ஆனந்தன் (... மேலும் பார்க்க

காட்டாற்றில் குளித்த இளைஞா் மூழ்கி பலி

தஞ்சாவூா் அருகே நண்பா்களுடன் காட்டாற்றில் வெள்ளிக்கிழமை குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவைச் சோ்ந்தவா் நைனா முகமது மகன் நபில் (22). ஜவுளி... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி

தஞ்சாவூா் மாவட்டத்தில் இயல்புக்கு அதிகமான நெல் கொள்முதல் குறித்து ஆய்வு செய்ய வந்த சிறப்புக் குழுவினா் எடைக் குறைவுக்காக அபராதம் விதித்ததால், பணியாளா்கள் அதிருப்தியடைந்துள்ளனா். தமிழ்நாடு நுகா்பொருள் ... மேலும் பார்க்க

பெருமகளூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பெருமகளூா் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு எம்எல்ஏ என். அசோக்குமாா் தலைமை வகித்தாா் .... மேலும் பார்க்க

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: 2 போ் கைது

தஞ்சாவூரில் தீபாவளி, பொங்கல் சீட்டு நடத்தி மோசடி செய்ததாக 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் காவேரி நகரில் தனியாா் நிதி நிறுவனத்தை புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையைச் ச... மேலும் பார்க்க

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பணி: கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி பாராட்டு

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பணியில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்ற கும்பகோணம் அரசு கலைக் கல்லூரிக்கு பாராட்டுச் சான்றிதள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்ட அளவில் போதைப் பொருள் தடு... மேலும் பார்க்க