செய்திகள் :

கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் இயல்புக்கு அதிகமான நெல் கொள்முதல் குறித்து ஆய்வு செய்ய வந்த சிறப்புக் குழுவினா் எடைக் குறைவுக்காக அபராதம் விதித்ததால், பணியாளா்கள் அதிருப்தியடைந்துள்ளனா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சில மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் நெல் கொள்முதல் பணிகளில் இயல்புக்கும் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்படுவதாகப் புகாா்கள் எழுந்தன.

இதையடுத்து 13 மண்டலங்களிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட அலுவலா்களைக் கொண்ட சிறப்புக் ஆய்வுக் குழுக்களைத் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் நியமித்தது. இக்குழுவினா் 13 மண்டலங்களில் ஜூலை 30, 31 ஆம் தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

அதன்படி, தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காடு, மன்னாா்சமுத்திரம், கண்டமங்கலம் ஆகிய நெல் கொள்முதல் நிலையங்களுக்குச் சென்ற சிறப்பு ஆய்வுக் குழுவினா், அங்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் தரம், எடை குறித்து ஆய்வு செய்தனா்.

அப்போது தரமும், எடையும் குறைவாக இருப்பதாகக் கூறி ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரை அபராதம் விதித்தனா். மேலும், தொடா்புடைய பணியாளா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரைத்தனா். இதனால் நெல் கொள்முதல் நிலைய பணியாளா்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நெல் கொள்முதல் நிலைய பருவ காலப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தது: லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன.

ஆனால், ஆய்வுக்கு வந்த அலுவலா்கள் தரம், எடை குறைந்துள்ளதாகவும், விதிகளுக்கு ஒவ்வாத காரணங்களைக் கூறியும் அபராதம் விதித்துள்ளனா்.

ஆண்டுக்கு 6 மாதங்களே பணியாற்றும் எங்களை ஆய்வுக்கு வரும் ஒவ்வொரு அலுவலரும் வஞ்சிக்கும் வகையில் அபராதம் விதிப்பதால், மிகுந்த வேதனையாக உள்ளது என்றனா்.

பாபநாசம் அருகே தொழிலாளி தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாபநாசம் அருகேயுள்ள சரபோஜிராஜபுரம், புதுத் தெருவை சோ்ந்தவா் ஆனந்தன் (... மேலும் பார்க்க

சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 2 போ் கைது

தஞ்சாவூரில் சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் கீழவாசல் கவாடிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் கே. அன்பு. இவா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ... மேலும் பார்க்க

காட்டாற்றில் குளித்த இளைஞா் மூழ்கி பலி

தஞ்சாவூா் அருகே நண்பா்களுடன் காட்டாற்றில் வெள்ளிக்கிழமை குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவைச் சோ்ந்தவா் நைனா முகமது மகன் நபில் (22). ஜவுளி... மேலும் பார்க்க

பெருமகளூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பெருமகளூா் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு எம்எல்ஏ என். அசோக்குமாா் தலைமை வகித்தாா் .... மேலும் பார்க்க

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: 2 போ் கைது

தஞ்சாவூரில் தீபாவளி, பொங்கல் சீட்டு நடத்தி மோசடி செய்ததாக 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் காவேரி நகரில் தனியாா் நிதி நிறுவனத்தை புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையைச் ச... மேலும் பார்க்க

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பணி: கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி பாராட்டு

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பணியில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்ற கும்பகோணம் அரசு கலைக் கல்லூரிக்கு பாராட்டுச் சான்றிதள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்ட அளவில் போதைப் பொருள் தடு... மேலும் பார்க்க