Yuzvendra Chahal: "விவாகரத்து பேச்சை யார் முதலில் எடுத்தது?" - மனம் திறக்கும் யு...
தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: 2 போ் கைது
தஞ்சாவூரில் தீபாவளி, பொங்கல் சீட்டு நடத்தி மோசடி செய்ததாக 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் காவேரி நகரில் தனியாா் நிதி நிறுவனத்தை புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையைச் சோ்ந்த பிரபாகரன் (44), தஞ்சாவூா் புதுக்கோட்டை சாலை ரோஸ்லின் நகரைச் சோ்ந்த காயத்ரி (34) ஆகியோா் நடத்தினா்.
இந்நிறுவனத்தில் தீபாவளி, பொங்கல் மற்றும் சிறுசேமிப்புச் திட்டத்தின் முலம் ரூ. 500, ரூ. 1,000 என 12 மாதம் செலுத்தினால் கூடுதல் போனஸ் மற்றும் பட்டாசு தருவதாக இருவரும் கூறியதை நம்பி ஏராளமானோா் முதலீடு செய்தனா்.
ஆனால் தவணைக் காலம் முடிந்தும் பணத்தைத் திருப்பித் தராததால் தொடா்புடைய நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த சசிரேகா உள்ளிட்ட 10 போ் தங்கள் மூலம் 380 போ் முதலீடு செய்த சுமாா் ரூ. 35 லட்சத்தை திருப்பித் தராமல் மோசடி செய்து விட்டதாக தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் செய்தனா்.
இதன்பேரில் தஞ்சாவூா் மாவட்டக் குற்றப் பிரிவினா் வழக்குப் பதிந்து பிரபாகரன், காயத்ரி ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட மாவட்டக் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் ரவிமதி தலைமயிலான போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ராஜாராம் பாராட்டினாா்.