செய்திகள் :

தென்னிந்திய பகுதிகளுக்கான புதிய ராணுவ தளபதி இன்று பொறுப்பேற்பு

post image

தென்னிந்திய பகுதிகளுக்கான புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி வெள்ளிக்கிழமை (ஆக. 1) பொறுப்பேற்கிறாா்.

இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதிகளாக தமிழ்நாடு, கா்நாடகம், கேரளம், ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்கள், புதுவை, லட்சத்தீவு ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களைக் கொண்டது. தென்னிந்தியப் பகுதிகளுக்கான புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்கிறாா்.

கேரளம், மலப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த இவா், 1987-இல் புதிதாக உருவாக்கப்பட்ட 16 சீக்கிய இலகு காலாட்படை பட்டாலியனில் நியமிக்கப்பட்டாா். இப்படைப் பிரிவு பின்னா் ஆகஸ்ட் 1992-இல் பாரா ரெஜிமென்ட்டாக மாற்றப்பட்டது. ராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவுகளிலும், பயிற்றுவிக்கும் அமைப்புகளிலும் பணியாற்றியுள்ள இவருக்கு, நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும், வெளிநாட்டில் ஐ.நா. மிஷனிலும் பணியாற்றிய அனுபவங்கள் உண்டு.

இவா், 31 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் (கமாண்டோ) பிரிவில் பணியாற்றியபோது 1998-இல் சௌா்ய சக்ரா விருதும், 2021-இல் தனது பிரிவின் கட்டளைக்காக சேனா பதக்கம் (சிறப்புமிக்க சேவைகள்) மற்றும் 2023-இல் அதி விஷிஷ்ட் சேவா பதக்கமும் பெற்றுள்ளாா். கடந்த 2009-இல் ஒருங்கிணைந்த பணியாளா் குழுவின் பாராட்டு அட்டை மற்றும் 2013-இல் ராணுவத் தலைமைத் தளபதி பாராட்டு அட்டை பெற்றுள்ளாா்.

Image Caption

லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி

ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் துப்பாக்கிச்சண்டை

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் அகலில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியி... மேலும் பார்க்க

தாய் - சேய்க்கு எச்ஐவி பாதிப்பு! 6 மாத மகன் கொலை!

மும்பையில் 6 மாத குழந்தையை கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.மும்பையில் கோவந்தி நகரில் ஓர் ஆலையில் பணிபுரிந்து வந்த 43 வயதான பெண்ணுக்கும், அவரது 6 மாத மகனுக்கும் எச்ஐவி பாதிப்பு இருப்பது ... மேலும் பார்க்க

2020-24 வரை புலி தாக்குதல்களால் 378 பேர் பலி: மத்திய அரசு

இந்தியாவில் 2020-24 வரை புலி தாக்குதல்களால் 378 பேர் பலியாகியுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், ... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை! இந்தியாவின் பதில் என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட இஸ்ரேல் - ஈரான் போர், தாய்லாந்து... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பிரதமர் தேவெ கௌடாவின் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இருப்பினும், தண்டனை விவரம் நாளை வெளியாகும் என பெங்களூர... மேலும் பார்க்க

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம் அமைப்பது குறித்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, மக்களவையில் கேள்வி ... மேலும் பார்க்க