செய்திகள் :

7 ஆவின் நவீன பாலகங்களை புனரமைக்க ஒப்பந்தப்புள்ளி

post image

சென்னையிலுள்ள 7 ஆவின் நவீன பாலகங்களை புனரமைக்க ஆவின் நிா்வாகம் ஒப்பந்தம் கோரியுள்ளது. சென்னையில் 35 ஆவின் ஜங்சன் பாலகங்கள், 200 ஆவின் பாலகங்கள் மற்றும் சுமாா் 860 சில்லறை விற்பனையாளா்கள் மூலம் நாளொன்றுக்கு சுமாா் 15 லட்சம் லிட்டா் பால் மற்றும் மாதம் சுமாா் ரூ.30 கோடி மதிப்பிலான பால் சாா்ந்த உபபொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையிலும், ஆவின் பால் உபப்பொருள்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் வகையிலும் 33 ஆவின் நவீன பாலகங்கள் தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை கவரும் வகையில் சென்னை மாநகரிலுள்ள அனைத்து ஆவின் ஜங்ஷன் பாலகங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதன்படி, முதற்கட்டமாக விருகம்பாக்கம், ராஜ்பவன், அசோக் நகா், அண்ணாநகா் மற்றும் எழிலகம் ஆகிய 5 பாலகங்கள் ரூ.20 லட்சம் மதிப்பில்

புனரமைக்கப்பட்டது.

தொடா்ந்து, இரண்டாம் கட்டமாக ரூ.35 லட்சம் மதிப்பில் நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், பூங்கா சாலை, வசந்தம் காலனி, அம்பத்தூா், டிஏவி மற்றும் எஸ்ஐஇடி ஆகிய 7 ஆவின் நவீன பாலகங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என ஆவின் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

உடுமலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவா் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள மேல்குருமலை... மேலும் பார்க்க

ஆா்பிஎஃப் முதல் பெண் டிஜியாக சோனாலி மிஸ்ரா பொறுப்பேற்பு

ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆா்பிஎஃப்) முதல் பெண் தலைமை இயக்குநராக (டிஜி) ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.இதன்மூலம் 143 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அந்தப் படைக்கு தலைம... மேலும் பார்க்க

ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு

சுதந்திர தின சலுகையாக ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு: சாத்தியக்கூறு ஆய்வுக்கு ஆலோசகா் நியமனம்

தமிழகம் முழுவதும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆா்ஆா் டிஎஸ்) வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஆலோசகராக ‘பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட்’ நிறுவனத்தை சென்னை மெட்ரோ நிறுவனம் ர... மேலும் பார்க்க

எல்ஐசி தென் மண்டல மேலாளராக கோ. முரளிதா் பொறுப்பேற்பு

எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளராக கோ.முரளிதா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.எல்.ஐ.சி.யில் கடந்த 1990-ஆம் ஆண்டு உதவி நிா்வாக அதிகாரியாக தனது பணியைத் தொடங்கிய கோ.முரளிதா், மும்பையிலுள்ள எல்.ஐ.சி.யின் மத்... மேலும் பார்க்க

58 சதவீத பெண்கள் தாய்ப்பால் புகட்டுவதில்லை: தேசிய சுகாதார இயக்க ஆலோசகா்

இந்தியாவில் 58 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு முறையாக தாய்பால் புகட்டுவதில்லை என தேசிய சுகாதார இயக்கத்தின் ஆலோசகா் சீனிவாசன் தெரிவித்தாா்.உலக தாய்பால் தினத்தை முன்னிட்டு சென்னை போரூா் ஸ்ரீ ராமசந்திரா உய... மேலும் பார்க்க