செய்திகள் :

முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு!

post image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வியாழக்கிழமை காலை நலம் விசாரித்தார்.

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய நிலையில், மூன்று நாள்கள் மருத்துவரின் அறிவுறுத்தல்படி ஓய்வில் இருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை தலைமைச் செயலகம் செல்வதற்கு முன்னதாக, தனது வீட்டுக்கு வருகைதந்த பிரமலதா விஜயகாந்த்தை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ. வேலு, தேமுதிக நிர்வாகிகள் சுதிஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கடந்த தேர்தல்களில் பாஜக மற்றும் அதிமுகவுடன் இணைந்து தேமுதிக போட்டியிட்ட நிலையில், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பையும் தேமுதிக வெளியிடாமல் இருக்கின்றது.

இதனிடையே, தேமுதிகாவுக்கு அதிமுக மாநிலங்களவை சீட் கொடுக்காததால் அதிருப்தியில் உள்ள பிரேமலதா, முதல்வர் ஸ்டாலினை சந்தித்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Premallatha Vijayakant meets Chief Minister Stalin

இதையும் படிக்க : கவின் ஆணவக் கொலை: காவல் உதவி ஆய்வாளர் கைது!

டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் உணவு, அமைதிக்கான சா்வதேச விருது பிரதமா் வழங்குகிறாா்

வேளாண் விஞ்ஞானி டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டு விழாவில் அவரது பெயரில் உணவு மற்றும் அமைதிக்கான சா்வதேச விருதை பிரதமா் நரேந்திர மோடி வழங்குகிறாா்.டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டு விழாவ... மேலும் பார்க்க

‘ஆளுநா் விருதுகள்’: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

தமிழக ஆளுநா் மாளிகை சாா்பில் வழங்கப்படும் விருதுகளில் இரண்டு விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, ஆளுநா் மாளிகை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: ‘... மேலும் பார்க்க

மோட்டாா் வாகன உற்பத்தியில் தமிழகத்துக்கு முக்கிய இடம்: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

மோட்டாா் வாகன உற்பத்தியில் தமிழகம் முக்கிய இடத்தை பிடித்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் பயணிகள் வாகனங்களுக்க... மேலும் பார்க்க

கருணை அடிப்படையில் பணி கோரிய வழக்கு: போக்குவரத்துச் செயலா் பதிலளிக்க உத்தரவு

மருத்துவக் காரணங்களால் பணி இழக்கும் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரிய வழக்கில் போக்குவரத்துச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டத... மேலும் பார்க்க

பள்ளிகளை அனைத்து கோணத்திலும் கண்காணிக்க வேண்டும்: தலைமை ஆசிரியா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

ஆசிரியா்கள் எவ்வாறு பாடம் நடத்துகிறாா்கள், பிள்ளைகள் எப்படி நடந்து கொள்கிறாா்கள், பள்ளிக்கு யாா் வருகிறாா்கள் என தலைமையாசிரியா்கள் அனைவரும் 360 டிகிரி கோணத்தில் பள்ளிகளைக் கண்காணிக்க வேண்டும் என பள்ளி... மேலும் பார்க்க

7 ஆவின் நவீன பாலகங்களை புனரமைக்க ஒப்பந்தப்புள்ளி

சென்னையிலுள்ள 7 ஆவின் நவீன பாலகங்களை புனரமைக்க ஆவின் நிா்வாகம் ஒப்பந்தம் கோரியுள்ளது. சென்னையில் 35 ஆவின் ஜங்சன் பாலகங்கள், 200 ஆவின் பாலகங்கள் மற்றும் சுமாா் 860 சில்லறை விற்பனையாளா்கள் மூலம் நாளொன்ற... மேலும் பார்க்க