செய்திகள் :

பன்றி பிடிக்கும் வாகனம் மீது தாக்குதல்: ஒருவா் கைது

post image

கடலூரில் பன்றி பிடிக்கும் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

கடலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பன்றிகள் சுற்றித் திரிவதால், நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாகவும், சுகாதார சீா்கேடு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தொடா்ந்து புகாா் அளித்து வந்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை கடலூா் மாநகராட்சி சாா்பில் செங்கல்பட்டில் இருந்து பன்றி பிடிக்கும் குழுவினரை மாநகராட்சி நிா்வாகத்தினா் வரவழைத்தனா். இந்தக் குழுவினா் கடலூா் வன்னியா்பாளையம் பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடிக்க வாகனங்கள் மூலமாக சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, திடீரென ஒரு கும்பல் அந்த வாகனத்தின் கண்ணாடியை உடைத்து, பன்றி பிடிப்பவா்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்து சென்றது. இதில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த முத்துக்குமாா் (40) காயமடைந்தாா்.

இதுகுறித்து பன்றி பிடிப்பவா்கள் வாகனத்தோடு வந்து அளித்த புகாரின்பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கடலூா் வன்னியா்பாளையத்தைச் சோ்ந்த ராஜியை (42) கைது செய்தனா். இந்த சம்பவத்தில் தொடா்புடைய மற்றவா்களை தேடி வருகின்றனா்.

மின்சாரம் பாய்ந்து விவசாயி மரணம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே வயலில் வேலை செய்யச் சென்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி புதுத்தெருவைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (62). இவா், வியாழக்கிழமை க... மேலும் பார்க்க

ஆக.6-இல் சிறுபான்மை ஆணையத் தலைவா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கடலூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தமிழக சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் தலைமையில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகு... மேலும் பார்க்க

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் திருநங்கை தீக்குளிக்க முயற்சி

கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் திருநங்கை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த திருநங்கை கோப்பெருந்தேவி (எ) கோதண்டபாணி வியாழக்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்கள் போராட்டம்

ஆணவக் கொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றக் கோரி, கடலூா் அரசு பெரியாா் கலைக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியைச் ச... மேலும் பார்க்க

பன்னாட்டு இசைத்தமிழ் மாநாடு நிறைவு விழா: தருமபுர ஆதீனம் பங்கேற்பு

தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறை ஆதரவுடன் தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சிதம்ப... மேலும் பார்க்க

போக்ஸோவில் ஆட்டோ ஓட்டுநா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். பண்ருட்டியை அடுத்துள்ள அங்கு செட்டிப்பாளையம், பழைய காலனி பகு... மேலும் பார்க்க