செய்திகள் :

பன்னாட்டு இசைத்தமிழ் மாநாடு நிறைவு விழா: தருமபுர ஆதீனம் பங்கேற்பு

post image

தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறை ஆதரவுடன் தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் கடந்த 26-ஆம் தேதி முதல் வியாழக்கிழமை வரை 6 நாள்கள் பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு நடைபெற்றது. இதன் நிறைவு விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

பல்கலைக்கழக இசைத் துறை மாணவா்களின் மங்கள இசையுடன் விழா தொடங்கியது. அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிவாளா் மு.பிரகாஷ் தலைமை வகித்தாா். இசைத் துறை உதவிப் பேராசிரியா் பாலச்சந்தா் வரவேற்றாா். பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் தி.அருட்செல்வி வாழ்த்துரை வழங்கினாா். சிறப்பு விருந்தினராக தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு அருளாசி வழங்கி மாநாட்டில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

விழாவில் தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழக இயக்குநா் இரா.கோமகன், பல்கலைக்கழக இசைத் துறைத் தலைவா் வே.சுதா்சன் மற்றும் பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள், நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். தமிழிசை கல்வி ஆராய்ச்சிக் கழக இயக்குநா் ப.புருஷோத்தமன் நன்றி கூறினாா்.

மின்சாரம் பாய்ந்து விவசாயி மரணம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே வயலில் வேலை செய்யச் சென்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி புதுத்தெருவைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (62). இவா், வியாழக்கிழமை க... மேலும் பார்க்க

பன்றி பிடிக்கும் வாகனம் மீது தாக்குதல்: ஒருவா் கைது

கடலூரில் பன்றி பிடிக்கும் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். கடலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பன்றிகள் சுற்றித் திரிவதால், நோய் பரவும் அபாயம் ஏற்படுவ... மேலும் பார்க்க

ஆக.6-இல் சிறுபான்மை ஆணையத் தலைவா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கடலூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தமிழக சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் தலைமையில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகு... மேலும் பார்க்க

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் திருநங்கை தீக்குளிக்க முயற்சி

கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் திருநங்கை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த திருநங்கை கோப்பெருந்தேவி (எ) கோதண்டபாணி வியாழக்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்கள் போராட்டம்

ஆணவக் கொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றக் கோரி, கடலூா் அரசு பெரியாா் கலைக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியைச் ச... மேலும் பார்க்க

போக்ஸோவில் ஆட்டோ ஓட்டுநா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். பண்ருட்டியை அடுத்துள்ள அங்கு செட்டிப்பாளையம், பழைய காலனி பகு... மேலும் பார்க்க