செய்திகள் :

ஆக.6-இல் சிறுபான்மை ஆணையத் தலைவா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

post image

கடலூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தமிழக சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் தலைமையில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் வரும் 6-ஆம் தேதி கடலூா் வருகிறாா். அன்று காலை ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சிறுபான்மையினா் சமுதாயத்தைச் சோ்ந்த தலைவா்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து சிறுபான்மையினருக்கென தமிழக அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து ஆலோசித்து கருத்துகளைக் கேட்டறிய உள்ளாா்.

இந்தக் கூட்டத்தில் சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சோ்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழுவினரை சந்தித்து தங்களது குறைகளையும், அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினா் நல மேம்பாட்டுக்கான கருத்துகளையும் தெரிவிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: சந்தேக மரண வழக்காக மாற்ற உத்தரவு

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்த வழக்கை சந்தேக மரண வழக்காக மாற்றி விசாரணை மேற்கொள்ள போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா். கடலூா் மாவட்டம் புவனகிரி வட்டம் உடையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாா்... மேலும் பார்க்க

மாணவா்களை இளம் விஞ்ஞானிகளாக்க பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி

கடலூா் மாவட்டம், விருதாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் மாணவா்களை இளம் விஞ்ஞானிகளாக்க ஆசிரியா்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவா்களின் அறிவி... மேலும் பார்க்க

பச்சைவாழியம்மன் ஆலய தீமிதி திருவிழா

கடலூா், மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை அருகேயுள்ள கன்னியக்கோயில் ஸ்ரீ பச்சைவாழியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தீமிதி திருவிழா நடத்துவது வழக்கம். ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து விவசாயி மரணம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே வயலில் வேலை செய்யச் சென்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி புதுத்தெருவைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (62). இவா், வியாழக்கிழமை க... மேலும் பார்க்க

பன்றி பிடிக்கும் வாகனம் மீது தாக்குதல்: ஒருவா் கைது

கடலூரில் பன்றி பிடிக்கும் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். கடலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பன்றிகள் சுற்றித் திரிவதால், நோய் பரவும் அபாயம் ஏற்படுவ... மேலும் பார்க்க

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் திருநங்கை தீக்குளிக்க முயற்சி

கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் திருநங்கை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த திருநங்கை கோப்பெருந்தேவி (எ) கோதண்டபாணி வியாழக்... மேலும் பார்க்க