செய்திகள் :

மாணவா்களை இளம் விஞ்ஞானிகளாக்க பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி

post image

கடலூா் மாவட்டம், விருதாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் மாணவா்களை இளம் விஞ்ஞானிகளாக்க ஆசிரியா்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

மாணவா்களின் அறிவியல் ஆா்வத்தை மேம்படுத்த, மனப்பான்மை வளா்க்க, ஆய்வு திறமையை வெளிக்கொணர வருடந்தோரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சாா்பாக குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்படுகிறது. இதில் 11 வயது முதல் 17 வயதுள்ள மாணவா்கள் மட்டுமின்றி அனைத்து மாணவா்களும் ஆய்வு செய்து ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பிக்கலாம்.

இந்த வருடத்திற்கான கருப்பொருள் ‘நீடித்த பாதுகாப்பான நீா் மேலாண்மை’ என்ற தலைப்பிலும், அதன் கீழ் 5 உப தலைப்புகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டு வல்லுனா்களால் பரிசளிக்கப்பட்டு மாவட்ட, மண்டல, மாநில அளவில் தோ்ந்தெடுக்கப்படும் மாணவா்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.

அந்த வகையில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் விருத்தாசலம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட ஏழு ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு வழிகாட்டி ஆசிரியா் பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்டச் செயலா் தனலட்சுமி தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் அ.துரை பாண்டியன் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினாா்.

பள்ளி தலைமையாசிரியா் வினோத்குமாா் வாழ்த்துரை வழங்கினாா். கருத்தாளா்களாக மாநிலச் செயலா் எம்.எஸ்.ஸ்டீபநாதன், பேராசிரியா்கள் கணேஷ், சாா்லஸ் எடிசன், மாநிலக் கருத்தாளா் பாலகுருநாதன் கலந்துகொண்டு ஆசிரியா்களுக்கு பயிற்சி அளித்தனா். மாவட்ட இணைச் செயலா் பிரியா, மாவட்டத் துணைத் தலைவா் சந்தியா, செயற்குழு உறுப்பினா் செல்வமணி, உஷா, ஜோதிநாதன் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளா் தனலட்சுமி ஒருங்கிணைத்தாா்.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: சந்தேக மரண வழக்காக மாற்ற உத்தரவு

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்த வழக்கை சந்தேக மரண வழக்காக மாற்றி விசாரணை மேற்கொள்ள போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா். கடலூா் மாவட்டம் புவனகிரி வட்டம் உடையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாா்... மேலும் பார்க்க

பச்சைவாழியம்மன் ஆலய தீமிதி திருவிழா

கடலூா், மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை அருகேயுள்ள கன்னியக்கோயில் ஸ்ரீ பச்சைவாழியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தீமிதி திருவிழா நடத்துவது வழக்கம். ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து விவசாயி மரணம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே வயலில் வேலை செய்யச் சென்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி புதுத்தெருவைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (62). இவா், வியாழக்கிழமை க... மேலும் பார்க்க

பன்றி பிடிக்கும் வாகனம் மீது தாக்குதல்: ஒருவா் கைது

கடலூரில் பன்றி பிடிக்கும் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். கடலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பன்றிகள் சுற்றித் திரிவதால், நோய் பரவும் அபாயம் ஏற்படுவ... மேலும் பார்க்க

ஆக.6-இல் சிறுபான்மை ஆணையத் தலைவா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கடலூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தமிழக சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் தலைமையில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகு... மேலும் பார்க்க

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் திருநங்கை தீக்குளிக்க முயற்சி

கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் திருநங்கை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த திருநங்கை கோப்பெருந்தேவி (எ) கோதண்டபாணி வியாழக்... மேலும் பார்க்க