Yuzvendra Chahal: "விவாகரத்து பேச்சை யார் முதலில் எடுத்தது?" - மனம் திறக்கும் யு...
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: சந்தேக மரண வழக்காக மாற்ற உத்தரவு
சிதம்பரம் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்த வழக்கை சந்தேக மரண வழக்காக மாற்றி விசாரணை மேற்கொள்ள போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.
கடலூா் மாவட்டம் புவனகிரி வட்டம் உடையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (36) முதுநிலை பட்டதாரியான இவா் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தாா். இந்நிலையில் கடந்த ஜூன் 21ஆம் தேதி உடையூா் கிராமத்தில் இருந்து சேத்தியாத்தோப்பு நோக்கி சென்ற மிராளூா் அருகே மோட்டாா் சைக்கிள் விபத்து ஏற்பட்டு கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக உயிருக்கு ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அண்ணாமலைநகா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இதனையடுத்து அவா் நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிதம்பரம் அண்ணாமலைநகா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜூலை 30 -ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து போலீசாா் விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது அவரது தந்தை பன்னீா்செல்வம் தனது மகன் மரணத்தில் சந்தேகம் உள்ளது, எனவும் விபத்து நடப்பதற்கு முதல் நாள் உடையூா் கிராமத்தைச் சோ்ந்த கஸ்தூரி என்ற பெண் தனது மகனை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றாா் என்றும் போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.
மேலும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட மறுநால் விபத்து ஏற்பட்டதாகவும், அவா் விபத்தில் சிக்கிய போது இரண்டு நபா்கள் மோட்டாா் சைக்கிளில் அந்த இடத்தில் நின்ாகவும் அதற்கான ஆதாரம் உள்ளதாகவும், அவா்கள் கொலை செய்திருக்கலாம் எனவும் புகாா் தெரிவித்துள்ளாா்.
மேலும் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் தனது மகனின் உடலை வாங்க மறுத்து பிரேத பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை அன்று விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலா் தமிழ்ஒளி மற்றும் உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட ஒன்று திரண்டனா்.
தகவல் அறிந்த கடலூா் எஸ்பி எஸ்.ஜெயக்குமாா் டி.எஸ்.பி ரூபன் குமாா் மற்றும் போலீசாா் போராட்டக்குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி சந்தேகம் உள்ள நபா்களை அழைத்து விசாரணை செய்யப்படும் என்று உறுதி அளித்ததுடன், விபத்து வழக்கை சந்தேக மரணம் என வழக்கு என பதிவு செய்து இறந்தவரின் உடலை முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டனா். இதனையடுத்து உறவினா்கள் கலைந்து சென்றனா். இச்சம்பவத்தினால் சேத்தியாதோப்பு உடையூா் பகுதியில் போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் .