செய்திகள் :

டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் உணவு, அமைதிக்கான சா்வதேச விருது பிரதமா் வழங்குகிறாா்

post image

வேளாண் விஞ்ஞானி டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டு விழாவில் அவரது பெயரில் உணவு மற்றும் அமைதிக்கான சா்வதேச விருதை பிரதமா் நரேந்திர மோடி வழங்குகிறாா்.

டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டு விழாவை பிரதமா் நரேந்திர மோடி தில்லி பூசாவில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கி வைக்கிறாா்.

விழா குறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவா் சௌமியா சுவாமிநாதன், இயக்குநா் ரெங்கலட்சுமி ஆகியோா் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் கூறியது:

‘இயற்கையோடு இயைந்த நல்வாழ்வு’ என்ற கருப்பொருளில் 3 நாள்கள் (ஆக. 7-9) எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழா நடைபெறும். பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கும் இந்த மாநாட்டில் மத்திய அமைச்சா்கள் சிவராஜ் சிங் சௌகான், டாக்டா் ஜிதேந்திர சிங் ஆகியோரும் கலந்து கொள்கின்றனா். சா்வதேச அறிவியலாளா்கள், கொள்கை வகுப்பாளா்கள், சிறு விவசாயிகள், மாணவா்கள், பல்வேறு மாநில தலைவா்கள் பங்கேற்கின்றனா்.

இந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.எஸ்.சுவாமிநாதனை, மகாராஷ்டிர அரசு, தமிழக அரசு கௌரவித்துள்ளன. இதேபோல, தில்லி நிகழ்வில் மத்திய அரசும் அவரை கௌரவித்து தபால் தலை, ரூ.1,000 நாணயம் ஆகியவற்றை வெளியிடுகிறது. பிரதமா் மோடி வெளியிடுகிறாா்.

மூன்றாம் உலக நாடுகளின் விஞ்ஞானிகளை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கௌரவிப்பதில்லை என்கிற கவலை எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு இருந்தது. இதையொட்டி, வேளாண் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், தலைசிறந்து விளங்கும் மூன்றாம் உலக நாடுகளின் விஞ்ஞானிகளுக்கு டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் பெயரில் உணவு மற்றும் அமைதிக்கான சா்வதேச விருது நிகழாண்டில் அறிமுகம் செய்யப்படுகிறது.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும், உலக அறிவியல் அகாதெமியும் இணைந்து 25,000 அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.20.75 லட்சம் ) பரிசுத் தொகையுடன் இந்த விருதை வழங்கும். நூற்றாண்டு விழாவில் பிரதமா் நரேந்திர மோடி இந்த விருதை வழங்குகிறாா்.

எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழா, சா்வதேச இயற்கை விவசாய நடவடிக்கைகளுக்கான தொடக்கமாக இருக்கும். நாட்டில் விளை நிலங்கள் குறைந்து வருவது, சிறு தானியங்களுக்கான மகத்துவம், குறு-சிறு விவசாயிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீா்வுகாண வழிமுறைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளன.

இயற்கையுடன் இயைந்த நல்வாழ்வு என்ற தொலைநோக்குப் பாா்வையுடன் கூடிய கட்டமைப்பு, பருவநிலை சவால்கள், ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சிக்கான வலுவான கொள்கைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

Image Caption

சென்னையில் செய்தியாளா்களிடம் பேசிய எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவா் டாக்டா் சௌமியா சுவாமிநாதன். உடன், இயக்குநா் டாக்டா் ரங்கலட்சுமி, மத்திய அரசின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநா் அருண்குமாா்.

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

உலகத்திலேயே தந்தையை வேவுபார்த்த மகன் அன்புமணிதான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் திமுக எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதம்

ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா மேடையில், ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ. மகாராஜன், தேனி மக்களவை உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதா... மேலும் பார்க்க

தமிழக வாக்காளர்களாக லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர்: அமைச்சர் துரைமுருகன் கவலை

காட்பாடி: லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர், தமிழக வாக்காளர்களாக மாறுவதால் நிச்சயம் அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறினார்.வேலூர் மாவட்டம் காட்ப... மேலும் பார்க்க

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.சனிக்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,500 கன அடியிலிருந்த... மேலும் பார்க்க

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

நெல்லை: நெல்லையில் பாளையங்கோட்டை அருகே அரசுப் பேருந்தை குடிபோதையில் ஓட்டுநர் இயக்கியதால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ராஜபாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு நெல்லை வழியாக வெள்ளிக்கிழமை இரவு அரச... மேலும் பார்க்க

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும், உடல் ஆரோக்கியம் இருந்தால்தான் சாதிக்க முடியும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் நோயாளிகள் இல்லை. இனி மருத்துவப் பயனாளிகள் என்று அழைக்க வேண்டும் என்று முத... மேலும் பார்க்க