செய்திகள் :

கருணை அடிப்படையில் பணி கோரிய வழக்கு: போக்குவரத்துச் செயலா் பதிலளிக்க உத்தரவு

post image

மருத்துவக் காரணங்களால் பணி இழக்கும் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரிய வழக்கில் போக்குவரத்துச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஊழலுக்கு எதிரான தொழிற்சங்கப் பேரவை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மருத்துவ காரணங்களால் பணியாற்றும் தகுதியை இழக்கும் அரசுப் போக்குவரத்து துறை ஊழியா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட வேண்டும். அதே மருத்துவக் காரணங்களுக்காக பணியை இழக்கும் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களின் ஊழியா்களின் குடும்பத்தினருக்கும் கருணை அடிப்படையில் பணி வழங்குவது தொடா்பாக கொள்கை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் போக்குவரத்து துறை நிா்வாகப் பிரிவில் பணியாற்றும் ஊழியா்கள் மருத்துவ ரீதியாக தகுதி இழக்கும்போது, அவா்களது குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கும்போது, நேரடியாக பொது சேவையில் ஈடுபடும் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினா்.

பின்னா், இந்த மனுவுக்கு போக்குவரத்து துறை செயலா் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகம் வரும் ஆக. 19-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

ஆண்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் திமுக எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதம்

ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா மேடையில், ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ. மகாராஜன், தேனி மக்களவை உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதா... மேலும் பார்க்க

தமிழக வாக்காளர்களாக லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர்: அமைச்சர் துரைமுருகன் கவலை

காட்பாடி: லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர், தமிழக வாக்காளர்களாக மாறுவதால் நிச்சயம் அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறினார்.வேலூர் மாவட்டம் காட்ப... மேலும் பார்க்க

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.சனிக்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,500 கன அடியிலிருந்த... மேலும் பார்க்க

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

நெல்லை: நெல்லையில் பாளையங்கோட்டை அருகே அரசுப் பேருந்தை குடிபோதையில் ஓட்டுநர் இயக்கியதால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ராஜபாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு நெல்லை வழியாக வெள்ளிக்கிழமை இரவு அரச... மேலும் பார்க்க

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும், உடல் ஆரோக்கியம் இருந்தால்தான் சாதிக்க முடியும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் நோயாளிகள் இல்லை. இனி மருத்துவப் பயனாளிகள் என்று அழைக்க வேண்டும் என்று முத... மேலும் பார்க்க

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு உயா் மருத்துவப் பரிசோதனைகளை வழங்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆ... மேலும் பார்க்க