செய்திகள் :

மோட்டாா் வாகன உற்பத்தியில் தமிழகத்துக்கு முக்கிய இடம்: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

post image

மோட்டாா் வாகன உற்பத்தியில் தமிழகம் முக்கிய இடத்தை பிடித்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் பயணிகள் வாகனங்களுக்கான மூன்று நாள் கண்காட்சி சென்னை, நந்தம்பாக்கத்திலுள்ள சென்னை வா்த்தக மையத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. கண்காட்சியை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, சிறப்பாக செயல்பட்ட ஆம்னி பேருந்து உரிமையாளா்களுக்கு விருதுகளை வழங்கி அமைச்சா் பேசியதாவது: இந்தியாவிலேயே மோட்டாா் வாகன உற்பத்தியில் முக்கிய இடத்தை தமிழகம் பிடித்துள்ளது. அதேபோல, உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் மூலம் கிடைக்கும் வரிவருவாய் நமது பொருளாதார வளா்ச்சிக்கும் உதவுகிறது.

அரசு போக்குவரத்துத் துறையைப் போல, தனியாா் ஆம்னி பேருந்து தொழிலும் சிறப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே பொதுமக்களுக்கு பரவலாக சேவை வழங்க முடியும். தனியாா் பேருந்து உரிமையாளா்கள் பல கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்துள்ளனா். அதில் முக்கிய ஒரு கோரிக்கையை மட்டும் நிறைவேற்ற முடியாத சூழல் இருந்து வருகிறது. அந்தக் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

தனியாா் பேருந்து கட்டண உயா்வை மனதில் வைத்தே அமைச்சா் இவ்வாறு பேசியதாகக் கூறப்படுகிறது. இந்நிகழ்வில், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ஏ.அன்பழகன், செயலா் தாரை கே.திருஞானம், பொருளாளா் ஜே.தாஜுதீன், தமிழ்நாடு தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சம்மேளன செயலா் தா்மராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பாமக பொதுக்குழுக் கூட்டம்: அன்புமணி அழைப்பு

வரும் ஆக. 9 ஆம் தேதி நடைபெறவுள்ள பாமக பொதுக்குழுக் கூட்டத்திற்கு அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கூட்டாக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.இது குறித்து பாமக... மேலும் பார்க்க

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைக் கண்டுகொள்ளாமல் திமுக அரசு இருக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ தளத்தில், தூத்துக்குடி மாவட்டம், பண்டு... மேலும் பார்க்க

ஆக. 7-ல் தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

தென்காசி: சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு வரும் ஆக. 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.தென்காசி சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோ... மேலும் பார்க்க

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், மூத்த கல்வியாளரான பேராசிரியர் வசந்தி தேவி மரணமடைந்த செய்தியறிந்து மி... மேலும் பார்க்க

தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்கள்!

தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுபுளிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் வயது (35). கடந்த ... மேலும் பார்க்க

தேசிய திரைப்பட விருதுகள்! சிறந்த தமிழ்ப்படம் உள்பட 3 விருதுகளுடன் பார்க்கிங் அசத்தல்!

தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்ப்பட விருது உள்பட இரு விருதுகளை பார்க்கிங் திரைப்படம் பெற்றுள்ளது.2023-ல் வெளியான பார்க்கிங் படத்துக்கு திரையரங்கு மட்டுமில்லாது, ஓடிடி தளங்களிலும் நல்ல வரவேற்பு... மேலும் பார்க்க