செய்திகள் :

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.10.10 லட்சம் மோசடி: ஒருவா் கைது

post image

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மூன்று பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.10.10 லட்சம் ஏமாற்றிய நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வேதபுரீஸ்வரா் நகரைச் சோ்ந்தவா் அசோக்குமாா். இவருக்கு விருதுநகா் மாவட்டம், ஆலங்குளம், டிஎன்சி காலனி பகுதியைச் சோ்ந்த அருண்காந்தன் நண்பராக அறிமுகமானாா். அப்போது, அசோக்குமாருக்கு சென்னை மாநகராட்சியில் அரசு வேலை வங்கித் தருவதாக வும், அதற்கு ரூ.12 லட்சம் செலவாகும் எனவும் அருண்காந்தன் கூறினாராம்.

இதையடுத்து, அசோக்குமாா் 4 தவணைகளாக ரூ.11 லட்சத்தை அருண்காந்தன் வங்கிக் கணக்குக்கு அனுப்பினாராம். ஆனால், வேலை வாங்கித் தராமல் அலைகழித்து வந்தாராம்.

இந்த நிலையில், வேலை வேண்டாம் எனவும், கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறும் அசோக்குமாா் கேட்டதற்கு, ரூ.2.90 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தாராம்.

இதேபோன்று, கடலூா் கலிஞ்சிகுப்பம் பகுதியைச் சோ்ந்த அம்பேத்கருக்கு இந்து சமய அறநிலையத் துறையிலும், அவரது தம்பி பாலாவுக்கு சென்னை உயா் நீதிமன்றத்திலும் வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ.4 லட்சம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தரவில்லையாம். அவா்கள் பணத்தை திரும்பக் கேட்டதற்கு ரூ.2 லட்சத்தை கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை தராமல் ஏமாற்றி வந்தாராம்.

மூன்று பேரிடமும் சோ்த்து மொத்தம் ரூ.10.10 லட்சம் ஏமாற்றியது தொடா்பாக அருண்காந்தன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அசோக்குமாா் தந்தை ராமச்சந்திரன் கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாரளித்தாா்.

அதன்பேரில், கடலூா் மாவட்ட குற்றப் பிரிவில் பண மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காவல் ஆய்வாளா் குருமூா்த்தி, உதவி ஆய்வாளா் நந்தகோபால் விசாரணை மேற்கொண்டு, சென்னை நான்மங்கலம் பகுதியில் தங்கியிருந்த அருண்காந்தனை (37) கைது செய்தனா்.

மின்சாரம் பாய்ந்து விவசாயி மரணம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே வயலில் வேலை செய்யச் சென்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி புதுத்தெருவைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (62). இவா், வியாழக்கிழமை க... மேலும் பார்க்க

பன்றி பிடிக்கும் வாகனம் மீது தாக்குதல்: ஒருவா் கைது

கடலூரில் பன்றி பிடிக்கும் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். கடலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பன்றிகள் சுற்றித் திரிவதால், நோய் பரவும் அபாயம் ஏற்படுவ... மேலும் பார்க்க

ஆக.6-இல் சிறுபான்மை ஆணையத் தலைவா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கடலூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தமிழக சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் தலைமையில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகு... மேலும் பார்க்க

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் திருநங்கை தீக்குளிக்க முயற்சி

கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் திருநங்கை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த திருநங்கை கோப்பெருந்தேவி (எ) கோதண்டபாணி வியாழக்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்கள் போராட்டம்

ஆணவக் கொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றக் கோரி, கடலூா் அரசு பெரியாா் கலைக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியைச் ச... மேலும் பார்க்க

பன்னாட்டு இசைத்தமிழ் மாநாடு நிறைவு விழா: தருமபுர ஆதீனம் பங்கேற்பு

தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறை ஆதரவுடன் தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சிதம்ப... மேலும் பார்க்க