செய்திகள் :

விவசாய கிணற்றில் விழுந்த காட்டு யானை பலி

post image

கோவை சோலைப்படுகை பகுதியில் விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த காட்டு யானையை போளுவாம்பட்டி வனத்துறையினர் மீட்டனர்.

கோவை மாவட்டம் சாடிவயல் அடுத்த சோலைப்படுகை பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த காட்டு யானைகள் அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதனைக் கண்ட விவசாயிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து விரைந்து வந்த வனத்துறையினர் யானைகளை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இரண்டு யானைகள் வனத்திற்குள் சென்ற நிலையில் ஒரு யானை மட்டும் வழி தெரியாமல் நிர்மலா என்பவருக்கு சொந்தமான 20 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் விழுந்தது.

விவசாய கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த காட்டு யானை.

அந்த கிணற்றில் அதிகயளவில் நீர் இருந்ததால் யானை நீரில் மூழ்கி உயிரிழந்தது.

இதையடுத்து யானையை மீட்பதற்காக பொக்லைன் கனரக வாகனம் கொண்டுவரப்பட்டு மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினரின் சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் காட்டு யானையின் உடல் மீட்கப்பட்டு உடல்கூறாய்வுக்காக கோவை குற்றாலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

உயிரிழந்த யானைக்கு சுமார் 35 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

விவசாய கிணற்றில் விழுந்து காட்டு யானை உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

The Poluvampatti Forest Department rescued a wild elephant that had fallen into an agricultural well in the Coimbatore Solaipadugai area and died.

மோடியும் டிரம்பும் இணைந்து கூறிய நட்பு என்னவாயிற்று?: ப.சிதம்பரம் கேள்வி

மோடியும் டிரம்பும் இணைந்து கூறிய நட்பு என்னவாயிற்று என முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் ம... மேலும் பார்க்க

மோடி-டிரம்ப் நட்புக்கு அர்த்தம் இல்லை: காங்கிரஸ் விமரிசனம்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், மோடி-டிரம்ப் நட்புக்கு அர்த்தம் ... மேலும் பார்க்க

பதிவுத் தபால் சேவையை நிறுத்தம்: சு.வெங்கடேசன் கண்டனம்

128 ஆண்டு நடைமுறையில் இருந்த பதிவுத் தபால் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவிற்கு சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.எளிய மக்கள் பயன்படுத்தி வரும் பதிவுத் தபால் ச... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கிய மயிலை 7 நிமிடத்தில் வனத்துறையிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்: வைரலாகும் விடியோ!

கோவை சிங்காநல்லூர் பகுதியில் மின் கம்பத்தில் அடிபட்டு கிடந்த மயிலை, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் ஏழு நிமிடங்களில் மீட்டு வனத்துறை வசம் ஒப்படைத்த சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.புதன்கிழமை மாலை, சிங்காநல்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 40,500 கன அடியாக சரிவு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 40,500 கன அடியாக நீடிக்கிறது. காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்... மேலும் பார்க்க

கவரைப்பேட்டையில் ரயில் விபத்துக்கு நாசவேலைதான் காரணம்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்

சென்னை: கவரைப்பேட்டையில் பாக்மதி ரயில் விபத்துக்கு நாசவேலைதான் காரணம் என விசாணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அக்.11-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டையில... மேலும் பார்க்க