செய்திகள் :

விபத்தில் சிக்கிய மயிலை 7 நிமிடத்தில் வனத்துறையிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்: வைரலாகும் விடியோ!

post image

கோவை சிங்காநல்லூர் பகுதியில் மின் கம்பத்தில் அடிபட்டு கிடந்த மயிலை, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் ஏழு நிமிடங்களில் மீட்டு வனத்துறை வசம் ஒப்படைத்த சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.

புதன்கிழமை மாலை, சிங்காநல்லூர் பகுதியில் மின் கம்பத்தில் அடிபட்டு காயமடைந்து கிடந்த மயிலைப் பார்த்த அந்த பகுதி மக்கள், ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவவை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரபத், காயமடைந்த மயிலை திறமையாக மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கோவை வனத்துறை அலுவலகத்திற்கு விரைந்தார்.மீட்கப்பட்ட மயிலை சரியாக ஏழு நிமிடங்களில் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

வனத்துறை அதிகாரிகளின் தகவலின் படி, காயம் அடைந்த ஆண் மயிலுக்கு நெஞ்சுப் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டு உள்ளது. தற்போது அதற்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓட்டுநர் பிரபத்தின் இந்த துரிதமான மற்றும் மனிதநேயமிக்க செயல் அந்த பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றதோடு, இதுதொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விவசாய கிணற்றில் விழுந்த காட்டு யானை பலி

An ambulance driver rescued a peacock that had fallen on an electric pole in the Singanallur area of Coimbatore in seven minutes and handed it over to the forest department, drawing praise.

மோடியும் டிரம்பும் இணைந்து கூறிய நட்பு என்னவாயிற்று?: ப.சிதம்பரம் கேள்வி

மோடியும் டிரம்பும் இணைந்து கூறிய நட்பு என்னவாயிற்று என முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் ம... மேலும் பார்க்க

மோடி-டிரம்ப் நட்புக்கு அர்த்தம் இல்லை: காங்கிரஸ் விமரிசனம்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், மோடி-டிரம்ப் நட்புக்கு அர்த்தம் ... மேலும் பார்க்க

பதிவுத் தபால் சேவையை நிறுத்தம்: சு.வெங்கடேசன் கண்டனம்

128 ஆண்டு நடைமுறையில் இருந்த பதிவுத் தபால் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவிற்கு சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.எளிய மக்கள் பயன்படுத்தி வரும் பதிவுத் தபால் ச... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 40,500 கன அடியாக சரிவு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 40,500 கன அடியாக நீடிக்கிறது. காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்... மேலும் பார்க்க

விவசாய கிணற்றில் விழுந்த காட்டு யானை பலி

கோவை சோலைப்படுகை பகுதியில் விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த காட்டு யானையை போளுவாம்பட்டி வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் சாடிவயல் அடுத்த சோலைப்படுகை பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு வனப்பகுத... மேலும் பார்க்க

கவரைப்பேட்டையில் ரயில் விபத்துக்கு நாசவேலைதான் காரணம்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்

சென்னை: கவரைப்பேட்டையில் பாக்மதி ரயில் விபத்துக்கு நாசவேலைதான் காரணம் என விசாணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அக்.11-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டையில... மேலும் பார்க்க