செய்திகள் :

சத்தீஸ்கா்: துப்பாக்கிச்சூட்டில் ஒரு நக்ஸல் கொலை- பாதுகாப்புப் படையினா் மூவா் காயம்

post image

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்ஸல்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒரு நக்ஸல் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நடவடிக்கையின்போது, நக்ஸல்களின் கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்புப் படையினா் மூவா் காயமடைந்தனா்.

இதுகுறித்து சுக்மா மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் சவான் கூறியதாவது:

சுக்மா - தந்தேவாடா மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள வனப் பகுதியில் நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கையில் காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்புப் படைகளை உள்ளடக்கிய கூட்டு படையினா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் மறைந்திருந்த நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினா் பதில் தாக்குதல் நடத்தினா்.

இந்த சண்டைக்குப் பிறகு, அந்தப் பகுதியில் தீவிர தேடுதலில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டபோது, குண்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் நக்ஸல் ஒருவரின் உடலை கண்டறிந்தனா். மேலும், அந்தப் பகுதியிலிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளையும் கைப்பற்றினா்.

அந்தப் பகுதியில் தொடா்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, நக்ஸல்கள் பதுக்கி வைத்திருந்த கண்ணிவெடி வெடித்தது. இதில் பாதுகாப்புப் படையினா் மூவா் காயமடைந்தனா். அவா்கள் உடனடியாக உயா் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அவா்களின் உடல்நிலை சீராக உள்ளது. அபாய கட்டத்தை கடந்துவிட்டனா் என்றாா்.

சத்தீஸ்கரில் இந்த ஆண்டில் மட்டும் 226 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். இதில், பிஜாபூா், பஸ்தா், கான்கோ், கொனாடாகான், நராயண்பூா், சுக்மா மற்றும் தந்தேவாடா பகுதிகளை உள்ளடக்கிய பஸ்தா் மண்டலத்தில் மட்டும் 208 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா்.

மத்திய வெளியுறவுத் துறை செயலாளரை சந்தித்த நேபாள எம்.பிகள்!

தில்லியில் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை, நேபாளத்தின் அனைத்துக் கட்சிக் குழுவினர் நேரில் சந்தித்துள்ளனர். நேபாளத்தின் அனைத்துக் கட்சிக் குழுவிலான, அந்நாட்டின் எம்.பிகள் இந்தியா வந்... மேலும் பார்க்க

மக்களவையில் எதிரொலித்த வயநாடு விவகாரம்: சீரமைப்பில் மத்திய அரசு மெத்தனப்போக்கு! -பிரியங்கா

வயநாடு நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதில் மத்திய அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கிறது என்று மக்களவையில் அத்தொகுதிக்கான எம்.பி. பிரியங்கா காந்தி பேசினார்.கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் கடந... மேலும் பார்க்க

சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை ரத்தாகுமா? மான் வேட்டை வழக்கு மீண்டும் விசாரணை!

சல்மான் கான் மீதான மான் வேட்டை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.கடந்த 1998-ஆம் ஆண்டு சட்டவிரோதமாக மான்களை வேட்டையாடியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கானை குற்றவாளி என ஜோத்... மேலும் பார்க்க

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30) மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்ப... மேலும் பார்க்க

2004 - 2014 வரை அமாவாசை இருள்; 2014 - 2025 வரை பௌர்ணமி நிலவு! -மாநிலங்களவையில் அனல் பறக்க விவாதம்

2004 - 2014 வரை அமாவாசை இருளாகவும், 2014 முதல் இன்று வரை பௌர்ணமி நிலவாகவும் இருப்பதாக ஜெ.பி.நட்டா உருவகப்படுத்தி ஒப்பிட்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்து மாநிலங்களவையில் பேசியுள்ள... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை மீது நம்பிக்கை இல்லை! - உச்சநீதிமன்றம்

நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை மீது நம்பிக்கை ஏற்படவில்லை என்றும் அவர் நீதிபதி பதவியில் நீடிப்பது குறித்து நாடாளுமன்றம் முடிவு செய்யப்பட்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.தில்லி உயர்நீதிமன்ற நீ... மேலும் பார்க்க