செய்திகள் :

பிளஸ் 2 துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் பி.இ. துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

தமிழகத்தில் பிளஸ் 2 சிறப்பு துணைத் தோ்வு மூலம் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் சோ்வதற்கான துணை கலந்தாய்வில் விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு வாய்ப்பு அளித்துள்ளது.

இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் 2025-26 தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை (டிஎன்இஏ) செயலா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை 2025-26 பொது கலந்தாய்வின் முடிவில் நிரப்பப்படாமல் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு பிளஸ் 2 சிறப்பு துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற, பொது மற்றும் தொழில்கல்வி பாடப்பிரிவு மாணவா்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

இதற்கான துணை கலந்தாய்வில் கலந்துகொள்வதற்கான விண்ணப்ப பதிவு செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) தொடங்கியுள்ளது. விண்ணப்பங்களை இணையதளங்களில் பதிவு செய்யலாம்.

இணையதள வசதியற்ற நிலையில் மாவட்டங்களில் உள்ள 110 தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை சேவை மையங்கள் (டிஎஃப்சி) வாயிலாகவும் அசல் சான்றிதழ்களுடன் பதிவுக் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 12-ஆம் தேதியுடன் முடிவடையும். கலந்தாய்வு மற்றும் கால அட்டவணையை இணையவழியாக அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் சுமார் 1 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையொட்... மேலும் பார்க்க

மோசடிப் புகார்: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!

ரூ. 1000 கோடி கடன் வாங்கித் தருவதாக ரூ. 5 கோடி பெற்ற மோசடிப் புகாரில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.புதுதில்லியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் திலீப்குமார். க... மேலும் பார்க்க

பாஜக மாநில துணைத் தலைவராக குஷ்பு நியமனம்

சென்னை: தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகளை நியமித்து மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் ஒப்புதலுடன், தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய ம... மேலும் பார்க்க

அண்ணா வழியில் செல்ல இன்னொரு கட்சி எதற்கு தம்பி? - விஜய்யை விமர்சித்த தமிழிசை!

தமிழ்நாட்டில் இனி 'ஆப்'பிற்கும் ஆதரவு கிடையாது, அப்பாவுக்கும் ஆதரவு கிடையாது என தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் பதிவிட்டுள்ளார். சென்னை பனையூரில் நடைபெற்ற நிகழ்வில... மேலும் பார்க்க

சாதியக் கட்டமைப்பை உடைப்போம்: நெல்லை ஆணவக் கொலைக்கு கனிமொழி கண்டனம்!

நெல்லையைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ... மேலும் பார்க்க

ஜெயலலிதா செய்தது வரலாற்றுப் பிழை: கடம்பூர் ராஜு பேச்சு

1999ல் மத்தியில் பாஜக ஆட்சியைக் கவிழ்த்து வரலாற்று பிழை செய்துவிட்டதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் குறிப்பிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்ட... மேலும் பார்க்க