செய்திகள் :

மா.சுப்பிரமணியன் மீதான வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் முடிவா?

post image

கடந்த 1995 ஆம் ஆண்டு சிட்கோ திட்டத்தின் கீழ் அதில் பணிபுரிந்த தொழிலாளியான கர்ணன் என்பவருக்கு அரசு தொழிலாளர்களுக்கான இடத்தை தமிழ்நாடு அரசு ஒதுக்கியிருந்தது.

அரசு ஊழியருக்கு ஒதுக்கும் இடத்தை வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என்ற விதிமுறை இருந்தும் கூட அப்போது மேயராக இருந்த தற்போதைய தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சட்டவிரோதமாக அந்த இடத்தை வாங்கி அதில் பெரிய வீடு கட்டியதாகவும், இதில் சுப்பிரமணியன் தனது அரசுப் பதிவியை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றிருக்கிறது என புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு பார்த்திபன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் மா.சுப்ரமணியன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. பொதுவாக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவருக்கு எதிராக காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றால் அதற்கு சபாநாயகர் ஒப்புதல் வழங்க வேண்டும். அந்த அடிப்படையில் அப்போது சபாநாயகராக இருந்த தனபால் மா. சுப்ரமணியனை விசாரிக்க அனுமதி வழங்குகிறார்.

இதனை அடுத்து சுப்ரமணியனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து விசாரணை நடைபெறுகிறது. இதற்கு எதிராக சுப்ரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கீழமை நீதிமன்றம் விசாரணை நடத்த அனுமதி வழங்குகிறது.

இதனை அடுத்து மா.சுப்பிரமணியனுக்கு கீழமை நீதிமன்றம் சம்மன் அனுப்புகிறது. இதற்கு எதிராக மா.சுப்பிரமணியன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு நீதிபதி சுதான்சு சூதுலியா தலைமையிலான அமர்வில் விரிவாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் சபாநாயகர் தனபால்
முன்னாள் சபாநாயகர் தனபால்

மா.சுப்ரமணியன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், `தாம் மேயராக பதவி வகித்த போது தான் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் தன்னை விசாரிக்க தமிழ்நாடு அரசுதான் ஒப்புதல் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் சபாநாயகர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார். இது நடைமுறையில் தவறானது எனவே தன்னை விசாரிக்க உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும்’ என கோரிக்கை முன் வைத்தார்.

அப்போது எதிர்மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், `மா.சுப்பிரமணியன் மேயராக இருந்தபோதுதான் முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கிறார். ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதுதான் அவருக்கு எதிராக எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சபாநாயகர் ஒப்புதல் வழங்கியது சரியானதுதான். எனவே மா.சுப்பிரமணியன் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதங்களை முன் வைத்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், `இந்த விவகாரத்தில் ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 17A கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது. அதன்படி பொது ஊழியர் முறைகேட்டில் ஈடுபட்ட போது அவர் வகித்த பதவியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரசிடம் அனுமதி பெற வேண்டுமா அல்லது சபாநாயகர் இடம் அனுமதி பெற வேண்டுமா என்ற முக்கிய கேள்வி எழுந்து இருக்கிறது.

மா. சுப்ரமணியன்
மா. சுப்ரமணியன்

எனவே இது குறித்து அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உத்தரவிடலாம் என இருக்கிறோம். ஆனால் அதற்கு முன்பாக அமர்வை மாற்றுவது தொடர்பாக விசாரணை நடத்த விரும்புகிறோம். எனவே எதிர்மனுதாரர் தரப்பு இந்த விவகாரத்தில் பதிலளிக்க வேண்டும்” என நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை இரண்டு வார காலத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

தொடர்ந்து அதிகரிக்கும் நாய்க்கடி சம்பவங்கள்... தாமாக முன்வந்து கையிலெடுத்த உச்ச நீதிமன்றம்!

குழந்தைகள் முதல் வயதானவர்கள் பலரும் தெருநாய்க்கடி சம்பவங்களால் பாதிக்கப்படுவதும், சில சமயங்களில் உயிரிழப்பதும் அனைத்து மாநிலங்களிலும் பெரும் பிரச்னையாக இருக்கிறது.இந்த நிலையில், தெருநாய்க்கடி விவகாரத்... மேலும் பார்க்க

`அவர் மீதான வழக்கில் அவரே நீதிபதியாக இருப்பதை எவ்வாறு அனுமதிப்பது?' - மேனாள் நீதியரசர் அரி பரந்தாமன்

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடி வருபவர். பயிற்சி பெற்ற அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி, திருப்பரங்குன்றம் மலை விவ... மேலும் பார்க்க

7 ஆண்டுகள் சிறை தண்டனை (அ) ஆயுள் தண்டனை... ஆப்ஷன் கொடுத்த உச்ச நீதிமன்றம் - ஒரு சுவாரஸ்ய வழக்கு!

நீதி தாமதமாக நிலைநாட்டப்படும் வழக்குகளை பார்த்திருப்போம். அப்படிப்பட்ட ஒரு கவனிக்கத்தக்க வழக்கில் கல்லூரி படிக்கும்போது செய்த குற்றத்துக்காக குற்றவாளிக்கு 67 வயதில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதி... மேலும் பார்க்க

Haryana: பாலியல் வழக்கில் சிறைக்கு சென்ற எம்.பி மகனுக்கு `துணை அட்வகேட் ஜெனரல்' பதவி

ஹரியானாவில் பாஜக எம்.பி சுபாஷ் பரலாவின் மகன் விகாஷ் பரலாவை அம்மாநில அரசு துணை அட்வகேட் ஜெனரலாக நியமித்திருக்கிறது. இந்த விகாஷ் பரலா, காரில் பெண் ஒருவரை துரத்திச் சென்று தொந்தரவு செய்த விவகாரத்தில் பால... மேலும் பார்க்க

குன்றத்தூர் அபிராமிக்கு சாகும்வரை சிறை - திருமணம் மீறிய உறவுக்காக குழந்தைகள் கொலை; தீர்ப்பு விவரம்

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அருகே மூன்றாம் கட்டளை, அங்கனீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜய் (30.) இவரின் மனைவி அபிராமி (25). இந்தத் தம்பதியினிருக்கு அஜய் (6) என்ற மகனும், கார்னிகா (4) என்ற... மேலும் பார்க்க

``சம்பாதித்து சாப்பிடுங்க..'' - ரூ.12 கோடி, BMW கார் ஜீவனாம்சம் கேட்ட மனைவியிடம் உச்ச நீதிமன்றம்

விவாகரத்து வழக்கு ஒன்றில் மனைவிக்கு சாதகமான மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கணவர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று (ஜூல... மேலும் பார்க்க