நாட்டில் எத்தனை கோயில்கள் அரசு கட்டுப்பாட்டில் உள்ளன?: உச்சநீதிமன்றம்
ஆபரேஷன் மகாதேவ்: பஹல்காம் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவர் கொலை
பஹல்காம் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஹாஸிம் மூஸா ஃபெளஜி, ஆபரேஷன் மகாதேவ் பெயரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அதில், மூஸா ஃபெளஜியும் ஒருவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் டாச்சிகம் தேசியப் பூங்காவிற்கு அருகிலுள்ள ஹர்வான் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று (ஜூலை 28) துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
பயங்கரவாதிகளை அப்பகுதியில் இருந்து அகற்றும் இந்தத் தாக்குதலுக்கு ஆபரேஷன் மகாதேவ் எனப் பெயரிடப்பட்டது. பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்வான் பகுதியில் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்மு - காஷ்மீர் காவல் துறையினரும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள், ஸ்ரீநகர் நகரில் இருந்து 20 கி.மீ சுற்றளவில் உள்ள டாச்சிகம் பகுதியில், தங்கள் தளங்களை மாற்றியிருக்கலாம் என உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | கர்னல் சோஃபியாவை அவமதித்தது குறித்து ராஜ்நாத் சிங் பேசாதது ஏன்? சு.வெங்கடேசன்