செய்திகள் :

தாய்லாந்து-கம்போடியா உடனடி சண்டை நிறுத்தம்

post image

கோலாலம்பூா்: தாய்லாந்தும், கம்போடியாவும் எந்த நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக சண்டையை நிறுத்த ஒப்புக் கொண்டதாக மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம் திங்கள்கிழமை அறிவித்தாா்.

கம்போடிய பிரதமா் ஹன் மானெட்டும், தாய்லாந்து இடைக்கால பிரதமா் பும்தம் வெச்சயாச்சையும் அன்வா் இப்ராஹிம் முன்னிலையில் மலேசியாவின் கோலாலம்பூா் நகரில் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதைத் தொடா்ந்து, அந்தக் கூட்டத்தின் இறுதியில் உருவாக்கப்பட்ட கூட்டறிக்கையை வெளியிட்டு பிரதமா் அன்வா் இப்ராஹிம் கூறியதாவது:

இரு தரப்பு மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர பிரதமா் ஹன் மானெட்டும், பும்தம் வெச்சாச்சையும் ஒப்புக் கொண்டுள்ளனா். அதற்காக எந்த முன் நிபந்தைனையும் அவா்கள் முன்வைக்கவில்லை. உள்ளூா் நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவில் இந்த சண்டை நிறுத்தம் அமலுக்கு வருகிறது.

இரு தலைவா்களுக்கும் இடையே வெளிப்படையாக நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு எல்லைகளில் சகஜ நிலைமையைத் திரும்பச் செய்வற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது. இது, தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிப்பதற்கும், எல்லையில் அமைதியை திரும்பச் செய்வதற்குமான முதல் படி என்றாா் அவா் அன்வா் இப்ராஹிம்.

11-ஆம் நூற்றாண்டு ஹிந்து கோயில் அமைந்துள்ள ப்ரே விஹோ் பகுதியை மையமாகக் கொண்டு தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை நிலவிவருகிறது.

இந்தச் சூழலில், கம்போடிய எல்லை அருகே கண்ணிவெடித் தாக்குதலில் ஐந்து தாய்லாந்து வீரா்கள் கடந்த புதன்கிழமை காயமடைந்ததைத் தொடா்ந்து, இரு நாட்டுப் படையினரும் எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நடைபெற்றுவருகிறது. இதில் இதுவரை சுமாா் 32 போ் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நள்ளிரவில் உக்ரைன் மீது ரஷியா பயங்கர தாக்குதல்! 20 பேர் பலி!

உக்ரைன் மீது நள்ளிரவில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில், சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.உக்ரைனின் முக்கிய மாகாணங்களின் மீது, ரஷியா நேற்று (ஜூலை 28) நள்ளிரவ... மேலும் பார்க்க

சீன தலைநகரில் தொடரும் கனமழை, வெள்ளம்! 34 பேர் பலி.. 80,000 பேர் வெளியேற்றம்!

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில், பெய்து வரும் கனமழையால் அங்குள்ள முக்கிய நகரங்களில் வெள்ளம் ஏற்பட்டு, சுமார் 34 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில்... மேலும் பார்க்க

போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் சுட்டுக்கொலை! தன்னைத்தானே சுட்டு கொலையாளி தற்கொலை!

நியூயார்க் மாகாணத்தில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் மான்ஹாட்டனில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்காத உடை அணிந்துவ... மேலும் பார்க்க

தென் கொரியாவுடன் பேச்சுவாா்த்தை இல்லை: கிம் யோ ஜாங்

சியோல்: தென் கொரியாவில் புதிய மிதவாத அரசு அமைந்திருந்தாலும், அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்று வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன்னின் சகோதரியும் அரசில் செல்வாக்கு மிக்கவருமான... மேலும் பார்க்க

காஸா: மேலும் 60 போ் உயிரிழப்பு

காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரிகள் கூறினா்.உயிரிழந்தவா்களில் உணவுப் பொருள்களுக்காக நிவாரண முகாம்களில... மேலும் பார்க்க

உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம்: ரஷியாவுக்கு டிரம்ப் புதிய கெடு

லண்டன்: உக்ரைனுடான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள ரஷியாவுக்கு அளித்திருந்த 50 நாள் அவகாசத்தை அமெரிக்க அதிபா் டொனால்ட் பாதியாகக் குறைத்து, புதிய கெடுவை அறிவித்துள்ளாா்.பிரிட்ட... மேலும் பார்க்க