செய்திகள் :

டிரம்ப் முன் மோடியின் 56 இன்ச் மார்பு 36 இன்ச்சாக சுருங்குகிறது! திரிணமூல் எம்பி

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் 56 இன்ச் மார்பு 36 இன்ச்சாக சுருங்குவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்து திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு விவாதம் தொடங்கியது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விளக்கத்தை தொடர்ந்து அவையின் உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.

அப்போது, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலை வர்த்தகத்தை முன்வைத்து தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 26 முறை தெரிவித்திருப்பது குறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி விமர்சித்து பேசினார்.

அவர் பேசியதாவது:

"அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுவது தவறு என எக்ஸ் தளத்தில்கூட பிரதமர் மோடி பதிவிடாதது ஏன்? அமெரிக்க அதிபர் முன்பு நிற்கும்போது, மோடியின் 56 இன்ச் மார்பு 36 இன்ச்சாக சுருங்குகிறது. 5 அடியாக உயரம் குறைகிறார். அமெரிக்க அதிபரைக் கண்டு ஏன் பயப்படுகிறீர்கள்?

ஆயுதப் படை வீரர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் 23 அன்று உதம்பூரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் உயிர் தியாகம் செய்த மேற்கு வங்க வீரர் ஹலில்தார் ஜான்டு அலி ஷேக்கிற்கு மரியாதை செலுத்துகிறேன்.

வீரர்கள் 4 நாள்கள் துணிச்சலுடன் போராடவில்லை என்றால் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றிருக்காது. இந்த பெருமை வீரர்களையே சாரும், அதை யாராலும் பறித்துக் கொள்ள முடியாது.” எனத் தெரிவித்தார்.

Trinamool Congress MP Kalyan Banerjee has criticized, that Prime Minister Narendra Modi's 56-inch chest is shrinking to 36 inches infront of US President Donald Trump.

இதையும் படிக்க : பாகிஸ்தான் தாக்குதலில் பலியோனோரின் 22 குழந்தைகளைத் தத்தெடுக்கும் ராகுல்!

மதத்தின் பெயரில் நடந்த சதியே பஹல்காம் தாக்குதல் : மக்களவையில் மோடி உரை

பஹல்காம் தாக்குதலில் மதத்தின் பெயரால் சதி நடந்ததாகவும், ஆனால், இந்திய மக்களின் ஒற்றுமை அதனை முறியடித்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை ஆபரேஷன் சிந்தூர்... மேலும் பார்க்க

டிரம்ப் ஒரு பொய்யர் என மோடி நாடாளுமன்றத்தில் சொல்வாரா? ராகுல் கேள்வி

புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே போரை தான்தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுவரை 29 முறை சொல்லிவிட்டார், அவர் ஒரு பொய்யர் என பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் சொல்வாரா? என ராகுல்... மேலும் பார்க்க

போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறியது வெட்கக்கேடு: ஆ. இராசா

போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறியது வெட்கக்கேடு என மக்களவையில் திமுக எம்.பி. ஆ. இராசா பேசியுள்ளார். மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் திமுக எம்.பி. ஆ. இராசா பேசுகையில், "திமுக என்பது தேச... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் உறவு வேண்டாம்; கிரிக்கெட் மட்டும் வேண்டுமா? -மத்திய அரசுக்கு ஓவைசி கேள்வி

புது தில்லி: பாகிஸ்தானுடன் உறவை முறித்துக்கொண்ட மத்திய அரசு கிரிக்கெட் விளையாட மட்டும் அனுமதிக்கலாமா? என்று ஓவைசி கேள்வியெழுப்பியுள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவ... மேலும் பார்க்க

போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டது உண்மை: மக்களவையில் ராகுல்

புது தில்லி: பாகிஸ்தான் விமானப் படை உள்கட்டமைப்பை தாக்க வேண்டாம் என இந்திய விமானிகளுக்கு உத்தரவிட்டது ஏன்? என்று மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார்.ஆபரேஷன் சிந்... மேலும் பார்க்க

மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு: மறுஆய்வு மனு ஆகஸ்ட்டில் விசாரணை!

புது தில்லி: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க அல்லது நிராகரிக்க குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் காலக்கெடு விதிக்கப்படுமா? மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்ச... மேலும் பார்க்க