செய்திகள் :

மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு: மறுஆய்வு மனு ஆகஸ்ட்டில் விசாரணை!

post image

புது தில்லி: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க அல்லது நிராகரிக்க குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் காலக்கெடு விதிக்கப்படுமா?

மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் ஏப்ரல் 8-இல் அளித்த தீா்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் அடுத்த மாதம் விசாரணை தொடங்குகிறது.

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் தாமதப்படுத்துவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், மசோதாக்கள் குறித்து முடிவு எடுப்பதில் ஆளுநா்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், காலக்கெடு மற்றும் வழிமுறைகளை வகுத்தது. அதன்படி,

  • மசோதாக்கள் மீது ஒரு மாதத்துக்குள் ஆளுநா் முடிவு எடுக்க வேண்டும், மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால், அதை 3 மாதங்களுக்குள் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

  • குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக மசோதாக்களை ஆளுநா் அனுப்பிவைத்தால், அவை குறித்து குடியரசுத் தலைவா் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும்.

  • மசோதாக்கள் மீது முடிவு எடுப்பதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், அதற்கான காரணங்களை எழுத்துபூா்வமாக பதிவு செய்து சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு குடியரசுத் தலைவா் தெரிவிக்க வேண்டும்.

  • மசோதாக்கள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக உள்ளது என்று கருதினால், மிகுந்த கவனத்துடன் செயல்படும் விதமாக, அதுகுறித்து உச்சநீதிமன்றத்தின் கருத்தை குடியரசுத் தலைவா் கோரலாம்.

  • மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்தால், அவரின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை மாநில அரசுகள் அணுகலாம்’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து, மாநில அரசுகளால் கொண்டுவரப்படும் மசோதாக்கள் அந்தந்த மாநிலத்துக்கான ஆளுநர்களிடம் ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பப்படும்போது, அவற்றுக்கு உரிய கால அவகாசத்துக்குள் ஆளுநர்களும் அதேபோல குடியரசுத் தலைவருக்கு ஆளுநர்களால் பரிசீலனைக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரும் உரிய கால அவகாசத்துக்குள் முடிவெடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தால் ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், இவ்விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையிலான அமர்வு முன் விரிவான விசாரணை நடத்தி மறு ஆய்வு செய்ய அரசமைப்புச் சட்டப்பிரிவு 143-இன் கீழ் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இதன் விசாரணை ஆகஸ்ட் 19-இல் தொடங்கும் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை(ஜூலை 29) தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி பி. ஆர். கவாய் தலைமையில் சூர்ய காந்த், விக்ரம் நாத், பி. எஸ். நரசிம்ஹா, ஏ. எஸ். சந்தூர்கர் நீதிபதிகள் அமர்வு முன் மறு ஆய்வு மனு விசாரணைக்கு வருகிறது.

குடியரசுத் தலைவரின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்யக்கோரி தமிழ்நாடு, கேரள மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளன. இவ்விவகாரத்தில் இவ்விரு எதிர்தரப்புகளிடமிருந்தும் சமர்ப்பிக்கப்படும் வாதங்கள் முதலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

the reference made to the Supreme Court by President Droupadi Murmu under Article 143 of the Constitution, following the the Supreme Court’s verdict on setting timelines for the President and governors to act on Bills passed by state Assemblies.

The Supreme Court will start hearing on August 19.

‘பிரளய்’ ஏவுகணை சோதனை வெற்றி

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனுடயை ‘பிரளய்’ ஏவுகணையின் இரு சோதனைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.இந்த ஏவுகணை 500 ... மேலும் பார்க்க

1962-க்குப் பிறகு சீனா ஒரு அங்குலம் நிலத்தில் கூட ஊடுருவவில்லை- அமைச்சா் ரிஜிஜு

கடந்த 1962-ஆம் ஆண்டு நிகழ்ந்த போருக்குப் பிறகு சீனா, இந்திய நிலப்பரப்பில் ஒரு அங்குலம் கூட ஊடுருவவில்லை என்று மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.மக்களவையில் ஆபரேஷன... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: ஆக. 25-இல் அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை

இந்தியா-அமெரிக்கா இடையேயான வா்த்தக ஒப்பந்தம் குறித்த அடுத்த சுற்றுப் பேச்சுவாா்த்தைக்காக அமெரிக்க குழுவினா் ஆகஸ்ட் 25-ஆம் தேதி இந்தியா வரவுள்ளனா் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவ... மேலும் பார்க்க

கன்னியாஸ்திரீகள் கைது: சத்தீஸ்கா் முதல்வரின் மதமாற்றம் குற்றச்சாட்டுக்கு கேரள பாஜக மறுப்பு

பாஜக ஆளும் சத்தீஸ்கரில் கேரளத்தைச் சோ்ந்த 2 கத்தோலிக்க கன்னியாஸ்திரீகள் மீதான கைது நடவடிக்கையை நியாயப்படுத்தி, அந்த மாநில முதல்வா் விஷ்ணு தேவ் சாய் சுமத்திய கடத்தல் மற்றும் மதமாற்றம் குற்றச்சாட்டுகளை... மேலும் பார்க்க

செஸ், கூடுதல் வரியாக ரூ.5.90 லட்சம் கோடி வசூல்: மத்திய அரசு திட்டம்

நிகழ் நிதியாண்டில் செஸ் மற்றும் கூடுதல் வரி மூலம், ரூ.5.90 லட்சம் கோடி வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செ... மேலும் பார்க்க

உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் இந்தியா 2-ஆம் இடம்! அமெரிக்கா முதலிடம்

உலக அளவில் கல்வித்தரத்தை அளவிடும் ‘டைம்ஸ்’ உயா் கல்வி அமைப்பின் தரவரிசையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது சிறந்த கல்வி நிறுவனங்களைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கவுள்ளது.மத்திய அரசின... மேலும் பார்க்க