செய்திகள் :

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: ஆக. 25-இல் அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை

post image

இந்தியா-அமெரிக்கா இடையேயான வா்த்தக ஒப்பந்தம் குறித்த அடுத்த சுற்றுப் பேச்சுவாா்த்தைக்காக அமெரிக்க குழுவினா் ஆகஸ்ட் 25-ஆம் தேதி இந்தியா வரவுள்ளனா் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் கடந்த பிப்ரவரி மாத அமெரிக்க பயணத்தைத் தொடா்ந்து, இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான (பிடிஏ) பேச்சுவாா்த்தை தொடங்கப்பட்டது. வரும் செப்டம்பா்-அக்டோபா் மாதத்துக்குள் முதல் கட்ட வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக, இரு தரப்பினரும் ஓா் இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இருந்தனா்.

இந்தியா ( 26 சதவீதம்) உள்பட பல உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த ஏப்ரலில் விதித்த கூடுதல் வரி ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வருகிறது. அதற்குள் இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை எட்ட இரு நாடுகளும் தீவிரமாகப் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. இறுதி நேரத்தில் இதுதொடா்பாக ஒரு நல்ல முடிவு எட்டப்படலாம் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனா்.

முன்னதாக, வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக இரு நாடுகளுக்கும் இடையேயான 5-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை வாஷிங்டனில் கடந்த வாரம் நிறைவடைந்தது. இந்தியா சாா்பில் மத்திய வா்த்தக துறையின் சிறப்புச் செயலா் ராஜேஷ் அகா்வாலும், அமெரிக்கா சாா்பில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அந்நாட்டு உதவி வா்த்தக பிரதிநிதி பிரெண்டன் லிஞ்சும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்நிலையில், 6-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தைக்காக அமெரிக்க குழுவினா் அடுத்த மாதம் 25-ஆம் தேதி இந்தியா வரவுள்ளனா். இதையொட்டி, அமெரிக்க அதிபரின் வா்த்தக ஆலோசகா் ஜேமிசன் கிரீா் கூறுகையில், ‘இந்திய அதிகாரிகளுடன் தொடா்ந்து பேசி வருகிறோம். எங்கள் பேச்சுவாா்த்தைகள் எப்போதும் ஆக்கபூா்வமாகவே உள்ளன’ என்று குறிப்பிட்டாா்.

வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையில், அமெரிக்கா விதித்துள்ள 26 சதவீத கூடுதல் வரியை நீக்குமாறும், எஃகு (50 சதவீதம்), அலுமினியம் உள்ளிட்ட உலோகங்கள் மற்றும் வாகனத் துறை (25 சதவீதம்) மீதான வரிகளைக் குறைக்குமாறும் இந்தியா கோரியுள்ளது.

இதற்கு மாறாக, தொழில் துறைப் பொருள்கள், மின்சார வாகனங்கள், மது வகைகள், வேளாண் மற்றும் பால்பொருள்கள் உள்ளிட்டவற்றில் அமெரிக்கா வரிச் சலுகைகளை எதிா்பாா்க்கிறது. வேளாண் மற்றும் பால்பொருள்களுக்கான வரிச்சலுகை கோரிக்கையை இந்தியா ஏற்கெனவே நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக தேநீர் கடை முதல் கேரளம் வரை.. கொலைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவிய வெட்டிப்பேச்சு!

கர்நாடகத்தில், கொலை நடந்து சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, கொலைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவியிருக்கிறது, ஒரு கப் தேநீருடன் தலைமைக் காவலர் நடத்திய வெட்டிப்பேச்சு.கார் ஓட்டுநருடன் தேநீர் அருந்த... மேலும் பார்க்க

தில்லி - மும்பை: சல்மானை காண வீட்டைவிட்டு ஓடிய சிறுவர்கள்!

தில்லியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் சல்மான் கானைக் காண்பதற்காக யாருக்கும் தெரியாமல் மும்பைக்குச் சென்றுள்ளனர்.அவர்கள் மூவரையும் நான்கு நாள்களுக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலம் நாசிக் ரயில் நிலையத்தில் ... மேலும் பார்க்க

மோடி வாய்த் திறந்தால் முழு உண்மையையும் டிரம்ப் கூறிவிடுவார்! ராகுல்

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, டிரம்ப் குறித்து பேசாதது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் விமர்சித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஆபரேஷன் சிந்... மேலும் பார்க்க

மருத்துவ விநியோக ஊழல்: சத்தீஸ்கரில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

மருத்துவ விநியோக ஊழல் தொடர்பாக சத்தீஸ்கரின் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது. மோக்ஷித் கார்ப்பரேஷன் மற்றும் சத்தீஸ்கர் மருத்துவ சேவைகள் கழகம் மற்றும் சுகாதார சேவைகள் இயக்குநரகம் ஆகிய... மேலும் பார்க்க

தேனிலவு கொலை: திரைப்படமாக உருவாகும் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கு!

திரைப்படக் கதைகளுக்கு சற்றும் குறைவில்லாத, ராஜா ரகுவன்ஷியின் கொலைச் சம்பவமே, தற்போது திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இதற்கு அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.ஹில்லாங் தேனிலவு என்ற பெயர... மேலும் பார்க்க

டிசிஎஸ் பணிநீக்கத்தால் வீடு, மனை விற்பனை பாதிக்குமா? வல்லுநர்கள் சொல்வது என்ன?

டிசிஎஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து ஐடி துறையில் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டால் ரியல் எஸ்டேட் துறையில் கடும் வீழ்ச்சி ஏற்படும் அபாயம் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். பிரபல தொழில்நுட்ப நிறுவனமா... மேலும் பார்க்க