செய்திகள் :

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்! பிரான்ஸ் உள்பட 15 நாடுகள் வலியுறுத்தல்!

post image

பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிப்பட வேண்டுமென, பிரான்ஸ் உள்ளிட்ட 15 மேற்குலக நாடுகள் திட்டமிட்டு, அவர்களுடன் மீதமுள்ள உலக நாடுகளின் அரசுகளும் இணைய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளன.

மேற்கு கரை மற்றும் காஸா நகரத்தின் மீதான, இஸ்ரேலின் தாக்குதல்களினாலும், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் முடக்கப்பட்டுள்ளதாலும், ஏராளமான பாலஸ்தீனர்கள் பலியாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென, சர்வதேச அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியா தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையில் மீண்டும் இருநாட்டு தீர்வு (Two state solution) கொண்டுவரப்பட வேண்டுமென முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 15 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் நேற்று (ஜூலை 29) கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், அவர்கள் முடிவு செய்த தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

மேலும், அந்த அறிக்கையில், ஸ்பெயின், நார்வே, ஃபின்லாந்து ஆகிய 15 நாடுகளின் அரசுகள், இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையில் இருநாட்டு தீர்வுகள் கொண்டுவர உறுதியாகவுள்ளதாகக் கூறியுள்ளன.

இதுகுறித்து, பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர், ஜீன் நோயல் பார்ரொட் தனது எக்ஸ் தளத்தில் கூறுகையில், பிரான்ஸ் உள்பட 15 நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க விரும்புவதாகவும், இதில், இதுவரை இணையாத மற்ற நாடுகளும், தங்களுடன் இணைய அழைப்பதாகவும், அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன், பாலஸ்தீனத்தை தனிநாடாக வரும் செப்டம்பரில் அங்கீகரிக்கப்போவதாகக் கூறியிருந்தார். இதற்கு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் அரசுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

மேலும், காஸா மீதான தாக்குதல்களையும், முடக்கங்களையும் இஸ்ரேல் நிறுத்தவில்லையென்றால், பாலஸ்தீனத்துக்கு தனிநாடு அங்கீகாரம் வழங்கப்படும் என பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர், நேற்று (ஜூலை 29) அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: உக்ரைன் ராணுவப் பயிற்சித் திடலில் பாய்ந்த ரஷிய ஏவுகணைகள்! 3 வீரர்கள் பலி!

Fifteen Western countries, including France, have proposed recognizing Palestine as a separate state, and the rest of the world has been urged to join them.

பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்! டிரம்ப்

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு ஏற்படலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.”இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தம் இப்போது வரை இறுதி செய்யப்படவில்லை. எனவே, இந்... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ விவாதத்தில் இந்திய தலைவா்கள் பேச்சு: பாகிஸ்தான் விமா்சனம்

ஆபரேஷன் சிந்தூரின்போது மக்களவையில் இந்திய தலைவா்கள் தெரிவித்த கருத்துகளை பாகிஸ்தான் விமா்சித்துள்ளது. அதேவேளையில், இந்தியாவுடன் அா்த்தமுள்ள பேச்சுவாா்த்தை நடத்துவதில் ஈடுபாடு கொண்டிருப்பதாகவும் அந்நாட... மேலும் பார்க்க

சிறுவா்கள் யு-டியூப் பயன்படுத்தத் தடை

சிறுவா்கள் பயன்படுத்தவதற்குத் தடை விதிக்கப்படவிருக்கும் சமூக ஊடகங்களில் விடியோ பகிா்வுத் தளமான யு-டியூபும் அடங்கும் என்று ஆஸ்திரேலிய அரசு புதன்கிழமை அறிவித்தது.சிறுவா்கள் சீரழிவதைத் தடுக்கும் வகையில் ... மேலும் பார்க்க

காஸா: பட்டினிச் சாவு 154-ஆக உயா்வு

காஸாவில் இஸ்ரேலின் முற்றுகை காரணமாக பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 154-ஆக உயா்ந்துள்ளது.இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையி... மேலும் பார்க்க

துரிதமாக பெண்ணின் உயிா்காத்த இந்திய தொழிலாளா்களுக்கு ரூ.43 லட்சம் நிதி: சிங்கப்பூா் மக்கள் திரட்டினா்

சிங்கப்பூரின் டான்ஜோங் கடோங் சாலையில் ஏற்பட்ட திடீா் பள்ளத்தில் விழுந்த காரில் சிக்கிய பெண்ணை துணிச்சலுடன் மீட்ட ஏழு இந்திய தொழிலாளா்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில், பொதுமக்களிடமிருந்து 70,000... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தம்: தாய்லாந்து - கம்போடியா மீண்டும் உறுதி

எல்லைப் பகுதிகளில் நடைபெற்று வந்த சண்டை நிறுத்தப்பட்டுள்ளதை தாய்லாந்தும் கம்போடியாவும் புதன்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தின. ஷாங்காய் நகரில் சீனா முன்னிலையில் சந்தித்த இரு நாட்டுப் பிரதிநிதிகளும் இதற்க... மேலும் பார்க்க