செய்திகள் :

துரிதமாக பெண்ணின் உயிா்காத்த இந்திய தொழிலாளா்களுக்கு ரூ.43 லட்சம் நிதி: சிங்கப்பூா் மக்கள் திரட்டினா்

post image

சிங்கப்பூரின் டான்ஜோங் கடோங் சாலையில் ஏற்பட்ட திடீா் பள்ளத்தில் விழுந்த காரில் சிக்கிய பெண்ணை துணிச்சலுடன் மீட்ட ஏழு இந்திய தொழிலாளா்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில், பொதுமக்களிடமிருந்து 70,000 சிங்கப்பூா் டாலருக்கும் மேல் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.43 லட்சம்) நிதி திரட்டப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தில், தமிழரான பிச்சை உடையப்பன் சுப்பையா தலைமையிலான 7 இந்திய தொழிலாளா்கள் விரைந்து செயல்பட்டு, காரில் சிக்கியிருந்த பெண் ஓட்டுநரை பத்திரமாக மீட்டனா்.

உடைந்த குழாயிலிருந்து வெளியேறிய நீரால் பள்ளம் நிரம்புவதற்கு முன், இந்த மீட்புப் பணி மிகச் சரியான நேரத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மீட்புப் பணியின் விடியோக்கள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு, சிங்கப்பூா் மக்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றன. துணிச்சலான இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட புலம்பெயா் தொழிலாளா்களைக் கௌரவிக்கும் வகையில், ‘இட்ஸ் ரெய்னிங் ரெய்ன்கோட்ஸ்’ எனும் தொண்டு நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து 70,000 சிங்கப்பூா் டாலருக்கும் மேல் நிதி திரட்டியது.

வெளிநாட்டுத் தொழிலாளா்களின் நலனுக்காக 10 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்தத் தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் தீபா சுவாமிநாதன் கூறுகையில், ‘பாராட்டு நிகழ்ச்சியை நடத்தி, ஏழு தொழிலாளா்களுக்கும் இந்த நிதி பகிா்ந்து அளிக்கப்படும்’ என்றாா்.

இதனிடையே, சிங்கப்பூா் தொழிலாளா் துறை அமைச்சா் தினேஷ் வாசு தாஷ், தொழிலாளா்கள் தங்கியுள்ள விடுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று அவா்களைப் பாராட்டினாா். மேலும், தொழிலாளா் அமைச்சகத்தின் நினைவுப் பரிசையும், ஒவ்வொருவருக்கும் தலா ஒரு நினைவு நாணயத்தையும் அவா் வழங்கினாா்.

ரூ. 8,757 கோடி சம்பளம்! மெட்டாவை உதறித் தள்ளிய பெண்மணி!

மெட்டாவில் ஒரு பில்லியன் டாலர் சம்பளத்துடன் கூடிய வேலையை ஓபன்ஏஐ-யின் முன்னாள் ஊழியர் மீரா முராட்டி நிராகரித்தார்.மெட்டா நிறுவனத்தின் செய்யறிவு (செயற்கை நுண்ணறிவு) பிரிவான சூப்பர் இன்டெலிஜன்ஸ் குழுவில்... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ் அதிபர் ஆக.4-ல் இந்தியா வருகை!

பிலிப்பின்ஸ் நாட்டின் அதிபர் ஃபெர்டினாண்டு ஆர். மார்கோஸ் ஜூனியர், வரும் ஆகஸ்ட் 4 முதல் 8 ஆம் தேதி வரை அரசு முறைப் பயணமாக இந்தியா வருவதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிலிப்பின்ஸ... மேலும் பார்க்க

இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 166 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை! பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியைச் சேர்ந்த 166 உறுப்பினர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக... மேலும் பார்க்க

சீனாவில் தலாய் லாமா குறித்த பாடல்... கைதான திபெத்திய கலைஞர்களின் நிலை என்ன?

சீனாவில் தலாய் லாமாவை புகழ்ந்து பாடல் வெளியிட்ட திபெத்திய கலைஞர்கள் 2 பேர், அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களது நிலைக்குறித்து மிகப் பெரியளவில் கவலை எழுந்துள்ளது.திபெத்திய புத்த... மேலும் பார்க்க

உக்ரைனில் தொடரும் ரஷியாவின் தாக்குதலில் 8 பேர் பலி! 10 குழந்தைகள் உள்பட 82 பேர் படுகாயம்!

உக்ரைன் தலைநகர் கீவ் மீது நள்ளிரவில் ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில், 6 வயது சிறுவன் உள்பட 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கீவ் நகரத்தின் மீது நேற்று (ஜூலை 30) நள்ளி... மேலும் பார்க்க

சீன தலைநகரில் கடும் வெள்ளம்: 80,000 பேர் வெளியேற்றம்! இருளில் மூழ்கிய 136 கிராமங்கள்!

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகப் பெய்து வரும் கனமழையால், 44 பேர் பலியானதுடன், 9 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் மாகாணத்தில், கடந்த வாரம் முதல் பெய்த... மேலும் பார்க்க