Cheese: இதயம், எலும்புகளை பாதுகாக்கும்; புற்றுநோய் தடுக்கும்! யார், எவ்வளவு சாப்...
மருத்துவ விநியோக ஊழல்: சத்தீஸ்கரில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
மருத்துவ விநியோக ஊழல் தொடர்பாக சத்தீஸ்கரின் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது.
மோக்ஷித் கார்ப்பரேஷன் மற்றும் சத்தீஸ்கர் மருத்துவ சேவைகள் கழகம் மற்றும் சுகாதார சேவைகள் இயக்குநரகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் தொடர்பாகக் கூறப்படும் ரூ. 500 கோடி மருத்துவ விநியோக ஊழல் தொடர்பாக சத்தீஸ்கர் முழுவதும் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனைகளை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராய்ப்பூர், துர்க் மற்றும் அருகிலுள்ள இடங்களில் உள்ள மருத்துவ சேவைகள் கழகம் மற்றும் சுகாதார சேவைகள் இயக்குநரக அதிகாரிகள், மருத்துவ சப்ளையர்கள் மற்றும் பிறருடன் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகிக்கப்படும் மீறல்களை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
2023ஆம் ஆண்டில் மருத்துவ உபகரணங்கள், ரசாயனங்களை வாங்கியதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள், மாநில கருவூலத்திற்கு ரூ. 550 கோடி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விலை ஒப்பந்தம் கிடைத்தவுடன், மருத்துவ சேவைகள் கழகம் மற்றும் சுகாதார சேவைகள் இயக்குநரக அதிகாரிகள், மேலும் கையாண்டு சுமார் ரூ. 500 கோடி மதிப்புள்ள கொள்முதல் ஆணைகளை வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிதி முறைகேடுகள், மோசடி கொள்முதல் நடைமுறைகள் மற்றும் மாநில சுகாதார கொள்முதல் அமைப்பில் தனியார் நிறுவனங்களுக்கும் பொது அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்பு பற்றிய ஆதாரங்களை வெளிக்கொண்டு வருவதே இந்த சோதனைகளின் நோக்கமாகும்.