செய்திகள் :

தேனிலவு கொலை: திரைப்படமாக உருவாகும் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கு!

post image

திரைப்படக் கதைகளுக்கு சற்றும் குறைவில்லாத, ராஜா ரகுவன்ஷியின் கொலைச் சம்பவமே, தற்போது திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இதற்கு அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.

ஹில்லாங் தேனிலவு என்ற பெயரில், ராஜா ரகுவன்ஷியின் கொலை வழக்கு திரைப்படமாக உருவாகவிருக்கிறது. ராஜாவின் திருமணம், மரணம், வழக்கு விசாரணை, சோனம் கைது செய்யப்படுவது உள்ளிட்டவற்றைக் கொண்டதாக இப்படம் தயாரிக்கப்படவிருக்கிறதாம்.

இது குறித்து ராஜாவின் சகோதரர் சச்சின் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அளித்த தகவலில், சகோதரரின் மரணம் குறித்து திரைப்படம் தயாரிக்க நாங்கள் அனுமதி கொடுத்துவிட்டோம். எங்கள் சகோதரரின் மரணம் குறித்து படம் எடுக்க ஒப்புக்கொள்ளாவிட்டால், யார் சரி, யார் தவறு என மக்கள் அறிந்துகொள்ள முடியாமல் போய்விடும் என்கிறார்.

திரைப்படத்தை இயக்கும் எஸ்பி நிம்பாவத் கூறுகையில், எங்கள் திரைப்படத்தின் மூலம், இதுபோன்ற கொலைகள் ஒருபோதும் நடக்கக் கூடாது என்று வலியுறுத்தும் வகையில் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு இந்தூரிலும் 20 சதவீத படப்பிடிப்பு மேகாலயத்திலும் நடைபெறவிருக்கிறதாம்.

இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி, அவரது மனைவி சோனம் ரகுவன்ஷியால் மேகாலயத்தில் கொலை செய்யப்படுகிறார். இவர்களுக்கு மே 11ஆம் தேதி திருமணமான நிலையில், மே 23ஆம் தேதி ராஜா கொல்லப்படுகிறார்.

இந்த வழக்கில், சோனம் மற்றும் அவரது காதலர் ராஜ் குஷ்வாஹா மற்றும் கூலிப்படையினர் கைது செய்யப்பட்டனர். தேனிலவு அழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பஹல்காம் தாக்குதல்: திமுக வலியுறுத்தல்

நமது நிருபர் பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் முழு உண்மையையும் மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தியது.இது தொடர்பாக மாநிலங்களவையில் இரண்டாம் நாளாக புதன்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகம் தொடர்புடைய பிரச்னைகள் மற்றும் கேள்விகளை தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்பினர். அவற்றின் விவரம் வருமாறு:-மக்களவையில்...எம்.பி. தொகுதி நிதி ரூ. 5 கோடி; ஆனா... மேலும் பார்க்க

ஆகஸ்டில் 46 டிஎம்சி காவிரி நீர்: உறுதிப்படுத்த தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபர்உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் ஆகஸ்ட் மாதத்துக்குரிய 45.95 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆ... மேலும் பார்க்க

குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விசாரிக்க கிரிக்கெட் மைதானம்தான் தேவைப்படும்: செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

நமது நிருபர்முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளில் 2,000-க்கும் மேற்பட்டவர்களை குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்த்ததற்காக தமிழக அரசை உச்சநீதிமன்றம் புதன்கிழமை கடிந்து கொண்டது.மேலும், ... மேலும் பார்க்க

தில்லியில் எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழா: ஆக. 7- இல் பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழாவை மத்திய அரசுடன் இணைந்து தில்லியில் இரு நாள்கள் கொண்டாடப்பட இருப்பதாகவும், இந்த விழாவை ஆக. 7-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளதாகவும... மேலும் பார்க்க

புலந்த்ஷஹா் வன்முறையில் 38 போ் குற்றவாளிகள்: உ.பி. நீதிமன்றம் தீா்ப்பு

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷஹா் மாவட்ட வன்முறை வழக்கில், 38 போ் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.கடந்த 2018-ஆம் ஆண்டு புலந்த்ஷஹரில் உள்ள சயானா பகுதியில், பசு வதைக்கப்பட்டு கொ... மேலும் பார்க்க