செய்திகள் :

மோடி வாய்த் திறந்தால் முழு உண்மையையும் டிரம்ப் கூறிவிடுவார்! ராகுல்

post image

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, டிரம்ப் குறித்து பேசாதது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து கடந்த மூன்று நாள்களாக விவாதம் நடைபெற்று வருகின்றன.

மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் மோடியும் ராகுல் காந்தியும் பங்கேற்று பேசினர்.

அப்போது பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூரை நிறுத்துமாறு உலகின் எந்த நாட்டுத் தலைவரும் இந்தியாவிடம் கூறவில்லை என்று டிரம்பின் பெயரைக் குறிப்பிடாமல் மோடி பேசியிருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில், ”இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றால் 25 % இறக்குமதி வரி விதிக்கப்படும், தனது வேண்டுகோளின் பெயரிலேயே இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது” என 30-வது முறையாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் ராகுல் காந்தி பேசுகையில்,

”டிரம்ப் பொய் கூறுகிறார் என்று பிரதமர் மோடி வெளிப்படையாக கூறவில்லை என்பது அனைவரும் அறிந்தது. அவரால் பேச முடியாது. மோடி பேசினால், உண்மையில் என்ன நடந்தது என்பதை முழுமையாக டிரம்ப் கூறிவிடுவார். அதனால்தான் பேச இயலாத சூழலுக்கு மோடி தள்ளப்பட்டுள்ளார்.

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை விரும்புவதால் டிரம்ப் நெருக்கடி கொடுக்கும் வகையில் பேசுகிறார். தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறார். எப்படிப்பட்ட ஒப்பந்தத்தை மேற்கொள்ளப் போகிறார்கள் என்பதை நீங்களே பார்ப்பீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தையில் இருக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை இரண்டு நாள்களில் இறுதி செய்யாவிட்டால், ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Lok Sabha Opposition Leader Rahul Gandhi has once again criticized Prime Minister Narendra Modi for not talking about Trump during his address to Parliament.

இதையும் படிக்க : போரை நிறுத்தியதாக மீண்டும் பேச்சு! எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறாரா டிரம்ப்.?!

பஹல்காம் தாக்குதல்: திமுக வலியுறுத்தல்

நமது நிருபர் பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் முழு உண்மையையும் மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தியது.இது தொடர்பாக மாநிலங்களவையில் இரண்டாம் நாளாக புதன்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகம் தொடர்புடைய பிரச்னைகள் மற்றும் கேள்விகளை தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்பினர். அவற்றின் விவரம் வருமாறு:-மக்களவையில்...எம்.பி. தொகுதி நிதி ரூ. 5 கோடி; ஆனா... மேலும் பார்க்க

ஆகஸ்டில் 46 டிஎம்சி காவிரி நீர்: உறுதிப்படுத்த தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபர்உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் ஆகஸ்ட் மாதத்துக்குரிய 45.95 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆ... மேலும் பார்க்க

குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விசாரிக்க கிரிக்கெட் மைதானம்தான் தேவைப்படும்: செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

நமது நிருபர்முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளில் 2,000-க்கும் மேற்பட்டவர்களை குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்த்ததற்காக தமிழக அரசை உச்சநீதிமன்றம் புதன்கிழமை கடிந்து கொண்டது.மேலும், ... மேலும் பார்க்க

தில்லியில் எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழா: ஆக. 7- இல் பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழாவை மத்திய அரசுடன் இணைந்து தில்லியில் இரு நாள்கள் கொண்டாடப்பட இருப்பதாகவும், இந்த விழாவை ஆக. 7-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளதாகவும... மேலும் பார்க்க

புலந்த்ஷஹா் வன்முறையில் 38 போ் குற்றவாளிகள்: உ.பி. நீதிமன்றம் தீா்ப்பு

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷஹா் மாவட்ட வன்முறை வழக்கில், 38 போ் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.கடந்த 2018-ஆம் ஆண்டு புலந்த்ஷஹரில் உள்ள சயானா பகுதியில், பசு வதைக்கப்பட்டு கொ... மேலும் பார்க்க