செய்திகள் :

வெளிநாடு செல்ல அனுமதி கோரிய செந்தில்பாலாஜியின் சகோதரா் வழக்கு: மருத்துவா் கடிதத்தை தாக்கல் செய்ய உத்தரவு

post image

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கான மருத்துவப் பரிந்துரைக் கடிதத்தை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா், தனக்கு இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி வழங்கக் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை தள்ளுபடி செய்து முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் அசோக்குமாா் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, அசோக்குமாா் அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனையின் விவரங்கள், விமான பயணச்சீட்டு, தங்குமிடம் உள்ளிட்ட விவரங்களைத் தாக்கல் செய்யவும், இந்தத் தகவல்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய அமலாக்கத் துறைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அசோக்குமாா் தரப்பில் மருத்துவ சிகிச்சை தொடா்பான விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது அமலாக்கத் துறை தரப்பில், மனுதாரருக்கு விசாரணை அதிகாரி 9 முறை அழைப்பாணை அனுப்பியும் ஆஜராகவில்லை, உயா்நீதிமன்றத்தில் மட்டும் ஆஜராவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மருத்துவ விவரங்களைப் படித்துப் பாா்த்த நீதிபதிகள், இதுபோன்ற பிரத்யேக சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல பரிந்துரைக்கும் மருத்துவரின் கடிதம் எங்கே? என்று கேள்வி எழுப்பினா். பின்னா், மருத்துவப் பரிந்துரைக் கடிதத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

அண்ணா வழியில் செல்ல இன்னொரு கட்சி எதற்கு தம்பி? - விஜய்யை விமர்சித்த தமிழிசை!

தமிழ்நாட்டில் இனி 'ஆப்'பிற்கும் ஆதரவு கிடையாது, அப்பாவுக்கும் ஆதரவு கிடையாது என தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் பதிவிட்டுள்ளார். சென்னை பனையூரில் நடைபெற்ற நிகழ்வில... மேலும் பார்க்க

சாதியக் கட்டமைப்பை உடைப்போம்: நெல்லை ஆணவக் கொலைக்கு கனிமொழி கண்டனம்!

நெல்லையைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ... மேலும் பார்க்க

ஜெயலலிதா செய்தது வரலாற்றுப் பிழை: கடம்பூர் ராஜு பேச்சு

1999ல் மத்தியில் பாஜக ஆட்சியைக் கவிழ்த்து வரலாற்று பிழை செய்துவிட்டதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் குறிப்பிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்ட... மேலும் பார்க்க

சென்னையில் நாளை முக்கிய அறிவிப்பு: ஓபிஎஸ்

சென்னையில் நாளை(ஜூலை 31) முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கடந்த மக்களவைத் தோ்தலின்போது த... மேலும் பார்க்க

கவின் ஆணவக் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

திருநெல்வேலி ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக தமிழ்நாடு அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர்கள் தம்பதியின் மகளை காதலித்த கவின், அந்த பெண்ணின் சகோதர... மேலும் பார்க்க

படப்பிடிப்பு விபத்து: பா. ரஞ்சித்துக்கு பிணை!

கீழ்வேளூர்: திரைப்பட படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த வழக்கில், இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு கீழ்வேளூர் நீதிமன்றம் புதன்கிழமை பிணை வழங்கியது.நாகை மாவட்டம் கீழையூர் அருகே விழுந்தமாவடி அல... மேலும் பார்க்க