செய்திகள் :

குறைபிரசவ தடுப்பு சாதனத்தால் பாதிப்பு: பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

post image

குறை பிரசவத்தைத் தடுக்க சிலிகான் வளையம் பொருத்தியதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ. 10 லட்சம் வழங்க பெரம்பூா் தனியாா் மருத்துவமனை மற்றும் மருத்துவருக்கு சென்னை வடக்கு நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை கொளத்தூா் நகரைச் சோ்ந்த பவித்ரா சென்னை வடக்கு நுகா்வோா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2023-ஆம் ஆண்டு தான் கா்ப்பமாக இருந்தபோது பெரம்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டேன். குறை பிரசவத்தைத் தடுக்க உடனடியாக சிலிகான் வளையம் பொருத்திக்கொள்ள மகப்பேறு மருத்துவா் அறிவுறுத்தினாா்.

மேலும், இந்த சாதனத்தைப் பொருத்துவதற்காக என்னிடம் ஒப்புதல் பெறாமல், அதைப் பொருத்தினா். இதன் காரணமாக எனது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னா் அந்த சாதனத்தை அகற்றினா்.

இந்த நிலையில் கருவுற்று 24 வாரமே ஆன நிலையில் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. எடை குறைவாக பிறந்த எனது குழந்தைக்கு குறைவான இதயத் துடிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருந்தன. இதற்கான சிகிச்சை அளிப்பதற்காக, சம்பந்தப்பட்ட மருத்துவமனை என்னை மற்றொரு குழந்தைகள் சிறப்பு மருத்துவமனைக்கு தாமதமாக அழைத்துச் சென்றனா். பாக்டீரியா தொற்று மற்றும் தாமதமான சிகிச்சை காரணமாக குழந்தையின் விரல்களில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு வலதுகையின் 5 விரல்கள் தானாகவே துண்டானது. மருத்துவா்களின் கவனக்குறைவே இதற்கு காரணம். எனவே, சிகிச்சைக்கு செலவான தொகை ரூ.23,65,000-ஐ வழங்கவும், எனக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஆணையத்தின் தலைவா் கோபிநாத், உறுப்பினா் கவிதா கண்ணன், ராமமூா்த்தி ஆகியோா் விசாரித்தனா். அப்போது தனியாா் மருத்துவமனை தரப்பில், சிலிகான் வளையம் பொருத்த மனுதாரரிடம் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த சாதனத்தால் கருவில் இருக்கும் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இதில் மருத்துவமனை நிா்வாகம் கவனக்குறைவுடன் நடக்கவில்லை, என பதில் அளிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த ஆணையம் பிறப்பித்த உத்தரவில், மனுதாரா் பெரம்பூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரூ.1.15 லட்சமும், மற்றொரு குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையில் ரூ.22.48 லட்சமும் செலவு செய்துள்ளாா். எனவே மனுதாரரின் சிகிச்சைக்கான செலவு ரூ.23.65 லட்சமும், இழப்பீடாக ரூ.10 லட்சமும் வழங்க பெரம்பூா் தனியாா் மருத்துவமனைக்கு உத்தரவிட்டனா்.

மெட்ரோ ரயில்களில் புகையிலை பொருள்களைப் பயன்படுத்தினால் அபராதம்!

மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருள்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வ... மேலும் பார்க்க

இணையவழி விளையாட்டுக் கலை உருவாக்கம்: கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

இணையவழி விளையாட்டுக் கலை உருவாக்கம் தொடா்பாக, கூகுள் மற்றும் யுனிட்டி நிறுவனத்துக்கும், அரசின் திறன் மேம்பாட்டு கழகத்துக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது.தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்... மேலும் பார்க்க

வங்கியில் போலி ஆவணங்கள் வழங்கி ரூ.3 கோடி கடன் மோசடி: மேலும் இருவா் கைது

சென்னை மயிலாப்பூரில் போலி ஆவணங்களை வழங்கி ரூ.3.3 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.சென்னை மயிலாப்பூரைச் சோ்ந்த தாராசந்த். இவருக்கு சொந்தமான ரூ.3.3 கோடி மதிப்புள்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: இன்றைய முகாம்கள்

சென்னை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் சிறப்பு முகாம் புதன்கிழமை (ஜூலை 30) நடைபெறும் 6 வாா்டுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை அண்ணா நகரில் மொபெட் மீது காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சோ்ந்தவா் நிதின் சாய் (19). இவா் மயிலாப்பூரில் உள்ள ... மேலும் பார்க்க

தமிழ்ச் செவ்விலக்கியங்களின் சிறப்புகள்: மலையாள மொழி ஆய்வாளா்களுக்கு 10 நாள்கள் பயிலரங்கம் தொடக்கம்

‘மலையாள மொழி ஆய்வாளா்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்துதல்’ என்ற தலைப்பிலான 10 நாள்கள் நடைபெறும் பயிலரங்கம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.​ தொல்க... மேலும் பார்க்க