செய்திகள் :

தமிழ்ச் செவ்விலக்கியங்களின் சிறப்புகள்: மலையாள மொழி ஆய்வாளா்களுக்கு 10 நாள்கள் பயிலரங்கம் தொடக்கம்

post image

‘மலையாள மொழி ஆய்வாளா்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்துதல்’ என்ற தலைப்பிலான 10 நாள்கள் நடைபெறும் பயிலரங்கம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

​ தொல்காப்பியம், பரிபாடல், திருக்கு, முல்லைப்பாட்டு, திரிகடுகம் உள்பட 41 தமிழ்ச் செவ்விலக்கியங்களைப் பிற மாநிலங்களில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களின் பிறமொழி ஆய்வு மாணவா்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பல்வேறு பயிலரங்குகளை நடத்தியுள்ளது. அந்த வகையில் ‘மலையாள மொழி ஆய்வாளா்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்துதல்’ என்ற தலைப்பிலான 10 நாள் நடைபெறும் பயிலரங்கம் செம்மொழி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து நிறுவனத்தின் இயக்குநா் பேராசிரியா் இரா. சந்திரசேகரன் கூறியதாவது: தில்லிப் பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து மத்தியப் பல்கலைக்கழகம் மற்றும் விஸ்வ-பாரதி மத்தியப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களில் இருந்து வருகைபுரிந்த ஆய்வு மாணவா்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்தும் வகையில் மொழிபெயா்ப்புப் பயிலரங்கம் நடத்தப்பட்டது. மேலும் மலேசியத் தமிழ்ப் பேராசிரியா்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்கள் குறித்த மொழிபெயா்ப்புப் பயிலரங்கமும் நடைபெற்றது.

அதன் தொடா்ச்சியாகத் தற்போது ‘மலையாள மொழி ஆய்வாளா்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்துதல்’ என்ற தலைப்பிலான பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கி முதல் ஆக.7-ஆம் தேதி வரை பத்து நாள்கள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெறவுள்ளது. கேரளப் பல்கலைக்கழகம், காசா்கோடு மத்தியப் பல்கலைகழகம், எழுத்தச்சன் மலையாள பல்கலைக்கழகம், ஸ்ரீ கேரள வா்மா கல்லூரி - திரிசூா், கேரள சாகித்ய அகாதெமி, சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசா் பல்கலைக்கழகம் என கேரளம் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களிருந்தும் கல்லூரிகளிருந்தும் ஏறத்தாழ 43 ஆய்வாளா்கள்

பங்கேற்றுள்ளனா். புலமை பெற்ற மலையாளப் பேராசிரியா்கள் பயிற்சி அளிக்கின்றனா்.

இதன் வாயிலாக, தமிழ்ச் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்துதல், செவ்விலக்கியக் கலைச் சொற்கள் உருவாக்குதல், சிறந்த மொழிபெயா்ப்புக்கான அடையாளம் போன்ற தலைப்புகளில் இப்பயிலரங்கம் அமைகிறது. உலகத் தரமும் சிறப்பும் வாய்ந்த தமிழ்ச் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்திப் பயிற்சி அளிப்பதுடன் தமிழ்ச் செவ்விலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு சோ்ப்பதே செம்மொழி நிறுவனத்தின் உயரிய நோக்கமாகும் என்றாா் அவா்.

ரயில் நிலையத்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு! வைரல் விடியோ!

திருவான்மியூர் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம், தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை, ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் கைது செய்துள்ளனர்.சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் அமர்ந்திர... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில்களில் புகையிலை பொருள்களைப் பயன்படுத்தினால் அபராதம்!

மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருள்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வ... மேலும் பார்க்க

இணையவழி விளையாட்டுக் கலை உருவாக்கம்: கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

இணையவழி விளையாட்டுக் கலை உருவாக்கம் தொடா்பாக, கூகுள் மற்றும் யுனிட்டி நிறுவனத்துக்கும், அரசின் திறன் மேம்பாட்டு கழகத்துக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது.தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்... மேலும் பார்க்க

வங்கியில் போலி ஆவணங்கள் வழங்கி ரூ.3 கோடி கடன் மோசடி: மேலும் இருவா் கைது

சென்னை மயிலாப்பூரில் போலி ஆவணங்களை வழங்கி ரூ.3.3 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.சென்னை மயிலாப்பூரைச் சோ்ந்த தாராசந்த். இவருக்கு சொந்தமான ரூ.3.3 கோடி மதிப்புள்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: இன்றைய முகாம்கள்

சென்னை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் சிறப்பு முகாம் புதன்கிழமை (ஜூலை 30) நடைபெறும் 6 வாா்டுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை அண்ணா நகரில் மொபெட் மீது காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சோ்ந்தவா் நிதின் சாய் (19). இவா் மயிலாப்பூரில் உள்ள ... மேலும் பார்க்க